×

மத்திய தொழில் பாதுகாப்பு படையினர் அணிவகுப்பு

கிருஷ்ணகிரி, மார்ச் 12: கிருஷ்ணகிரியில் மத்திய தொழில் பாதுகாப்பு படையினர் வாக்காளர்கள் அச்சமின்றி வாக்களிப்பதை உறுதி செய்யும் வகையில், கொடி அணிவகுப்பு பேரணி நடத்தினர். தமிழக சட்டசபை தேர்தல் தேதி விரைவில் அறிவிக்கப்பட உள்ளது. தேர்தலின் போது பாதுகாப்பு பணியில் ஈடுபட, தேர்தல் ஆணையத்தின் உத்தரவுப்படி, ஒவ்வொரு மாவட்டத்திற்கும் மத்திய தொழில் பாதுகாப்பு படை வீரர்கள் அனுப்பப்பட்டு வருகின்றனர். கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள கிருஷ்ணகிரி, பர்கூர் ஊத்தங்கரை, ஓசூர், தளி, வேப்பனஹள்ளி ஆகிய 6 சட்டசபை தொகுதிகளில், தேர்தலின்போது பாதுகாப்பு பணியில் ஈடுபட முதற்கட்டமாக 66 வீரர்கள் அடங்கிய மத்திய தொழில் பாதுகாப்பு படையினர் கிருஷ்ணகிரிக்கு வந்துள்ளனர். இவர்கள் கிருஷ்ணகிரியில் நேற்று மாலை 4.30 மணியளவில், கொடி அணிவகுப்பு பேரணியை நடத்தினர். மத்திய தொழில்பாதுகாப்பு படை இன்ஸ்பெக்டர் முகேஷ்குமார், கிருஷ்ணகிரி ஏ.டி.எஸ்.பி., சங்கர் தலைமையில் பழையபேட்டை மேல்தெரு கொத்தப்பேட்டாவில் இருந்து தொடங்கிய ஊர்வலம் காந்திசாலை, பெங்களூரு சாலை வழியாக ஆர்.சி., பள்ளியில் நிறைவடைந்தது. கிருஷ்ணகிரி டி.எஸ்.பி., ராமச்சந்திரன், 20 ஆயுதப்படை போலீசார் மற்றும் கிருஷ்ணகிரி போலீசார் உள்பட 116 பேர் இதில் கலந்து கொண்டனர்.

Tags : Parade ,Central ,Occupational Safety Troops ,KRISHNAGIRI ,CENTRAL LABOUR SECURITY FORCES ,Tamil Nadu Assembly ,
× RELATED கிருஷ்ணகிரிக்கு நாளை துணை முதல்வர் வருகை