கோவை: கோவையில் இருந்து சென்னை சென்ட்ரல் வந்த ரயிலில் பயணி ஒருவரிடம் ரூ.80 லட்சம் ரொக்கம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. சேலத்தைச் சேர்ந்த ராதாகிருஷ்ணன் கேசவன் (47) என்பவரிடம் பணத்தைப் பறிமுதல் செய்த ரயில்வே பாதுகாப்புப் படையினர் வருமான வரித்துறைக்கு தகவல் தெரிவித்து பணத்தை ஒப்படைத்தனர்.
