தூத்துக்குடி: இந்தியாவிலேயே ஒரே கப்பலில் அதிக காற்றாலை இறகுகளை கையாண்டு தூத்துக்குடி வஉசி துறைமுகம் புதிய சாதனையைப் படைத்தது. சீனாவின் சின்சோ துறைமுகத்தில் இருந்து வந்த கப்பலில் ஏற்றப்பட்டிருந்த 147 காற்றாலை இறகுகள், வெற்றிகரமாக தூத்துக்குடி வஉசி துறைமுகத்தில் இறக்கப்பட்டன.
