சென்னை: தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி தலைவர் ஜி.கே.வாசன் வெளியிட்டுள்ள அறிக்கை: 10ம் வகுப்பு பொதுத்தேர்வு அடுத்தக்கட்ட மேற்படிப்புக்கு மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது என்பதை கவனத்தில் கொண்டு மாணவ, மாணவிகள் நன்றாக தேர்வு எழுத வேண்டும்.
தமிழக அரசு, தேர்வு மையங்களில் குடிநீர், கழிப்பறை ஆகிய அடிப்படை வசதிகள் உள்ளிட்ட அனைத்து முன்னேற்பாடுகளையும் ஆய்வு செய்து உறுதி செய்துகொள்ள வேண்டும். 10ம் வகுப்பு பொதுத்தேர்வுகள் எழுதும் மாணவ, மாணவிகள் அனைவரும் நன்கு தேர்வு எழுதவும், அனைவரும் தேர்ச்சி பெறவும், அதிக மதிப்பெண்கள் பெறவும் வாழ்த்துகளை தெரிவித்துக்கொள்கிறேன்.
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
