×

உள்ளாட்சி நிதி தணிக்கைத்துறை கூட்டுறவு சங்கம் ரூ.1.89 கோடிக்கு கடன் வழங்கல்

நெல்லை, மார்ச் 11: உள்ளாட்சி நிதி தணிக்கை மற்றும் அரசுதுறை தணிக்கை பணியாளர்கள் கூட்டுறவு சிக்கன நாணயச்சங்கம் நடப்பு ஆண்டில் ரூ.1.89 கோடிக்கு கடன் வழங்கியுள்ளது. இச்சங்கமானது 1998ம் ஆண்டு முதல் செயல்பட்டு வருகிறது. வைப்புநிதியாக ரூ.76.22 லட்சமும், பங்குத்தொகையாக ரூ.29.68 லட்சமும், பெற்றுள்ளது. இதன் எல்கை பகுதியாக திருநெல்வேலி, துாத்துக்குடி, தென்காசி மாவட்டங்களை செயல் எல்கையாகக்கொண்டு செயல்பட்டு வருகிறது. இச்சங்கம் அதன் உறுப்பினர்களுக்கு மத்திய காலக்கடனாக ரூ.1.89 கோடிக்கு கடன்கள் வழங்கியுள்ளது. மேலும் தொடர்ந்து லாபத்தில் செயல்பட்டு அதன் உறுப்பினர்களுக்கு 14% டிவிடெண்ட் வழங்கி வருகிறது. மேலும் உறுப்பினர்களுக்கு கொடுக்கப்பட்ட கடன்களில் தவணை தவறிய கடன்கள் முழுவதும் வசூல் செய்யப்பட்டு நிலுவையில்லாமல் உள்ளது. சங்கத்தின் செயலாட்சியர் பொன்ராஜ், நிர்வாகத்தால் சங்கம் சிறப்பாக செயல்பட்டு வருகிறது. இத்தகவலை கூட்டுறவு சார்பதிவாளர், செயலாட்சியர் வின்சென்ட் தெரிவித்துள்ளார்.

Tags : Local Government Finance Audit Department Cooperative Society ,Nellai ,Local Government Finance Audit and Government Department Audit Employees Cooperative Savings Bank ,
× RELATED சர்வதேச மகளிர் தின விழா 1000 பேருக்கு நலத்திட்ட உதவிகள்