- உடன்குடி
- கலிமுத்து
- Mariyappan
- நாசரேத் திருவள்ளுவர் காலனி
- திருச்செந்தூர் முருகன் கோவில்
- சோனகன்விளை
- குரும்பூர்
- உடன்குடி…
உடன்குடி, மார்ச் 11: நாசரேத் திருவள்ளுவர் காலனியை சேர்ந்தவர் மாரியப்பன் மகன் காளிமுத்து(20). இவர், திருச்செந்தூர் முருகன் கோயிலில் தூய்மைப்பணியாளராக பணியாற்றி வருகிறார். நேற்று அதிகாலையில் வேலை முடிந்து பைக்கில் வீட்டிற்கு சென்று கொண்டிருந்தார். குரும்பூர் அடுத்த சோனகன்விளையில் வந்தபோது, உடன்குடி அனல்மின் நிலையத்திற்கு நிலக்கரி சாம்பல் ஏற்றுவதற்கு சென்று கொண்டிருந்த லாரி மீது மோதியதில் தூக்கி வீசப்பட்ட காளிமுத்துவுக்கு தலை மற்றும் காலில் பலத்த காயம் ஏற்பட்டது. அப்போது அவ்வழியாக வந்தவர்கள் மீட்டு திருச்செந்தூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து, தொடர்ந்து மேல்சிகிச்சைக்காக தூத்துக்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
