×

ஜாகிர்வெங்கடாபுரம் அரசு பள்ளியில் போதைப்பொருள் தடுப்பு விழிப்புணர்வு சைக்கிள் பேரணி

கிருஷ்ணகிரி : கிருஷ்ணகிரி அடுத்த ஜாகிர்வெங்கடாபுரம் அரசு உயர்நிலைப்பள்ளியில், போதைப்பொருள் தடுப்பு விழிப்புணர்வு சைக்கிள் பேரணி நடந்தது.கிருஷ்ணகிரி அருகே ஜாகிர்வெங்கடாபுரம் அரசு உயர்நிலைப்பள்ளியில், போதைப் பொருள் தடுப்பு விழிப்புணர்வு சைக்கிள் பேரணி நடந்தது. பேரணியை தலைமை ஆசிரியர் சுதாராணி கொடியசைத்து துவக்கி வைத்தார்.

இதில், மாணவ, மாணவிகள் 30க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். பேரணியில், போதைக்கு அடிமையாகாதே, எதிர்காலத்தை தொலைக்காதே. உன் திறமைகளை போதைக்குள் புதைக்காதே, போதை உயிருக்கு கேடு.

போதை மரணத்தை தரும் ஒரு மாய வலை. போதையின் பாதையில் செல்லாதே, எமனின் கையில் சிக்காதே. போதைக்கு அடிமையாகாதே, குடும்பத்தை இழக்காதே போன்ற விழிப்புணர்வு வாசகங்கள் அடங்கிய பதாதைகளுடன், கோஷங்களை எழுப்பியவாறு சென்றனர்.இதற்கான ஏற்பாடுகளை போதை தடுப்பு மன்ற பொறுப்பாளர் வெண்ணிலா செய்திருந்தார். நிகழ்வில், உதவி தலைமை ஆசிரியர் சங்கர் மற்றும் ஆசிரியர்கள் பார்வதி, தவுலத், கவிதா, பரணி உள்பட பலர் பங்கேற்றனர்.

Tags : Drug Prevention Awareness Cycle Rally ,Jakarvenkadapuram Government School ,Krishnagiri ,Jakarvenkadapuram Government High School ,prevention awareness ,Jagirvenkadapuram ,Government High School ,Sudarani ,
× RELATED சிலிண்டர் தேவை மற்றும் கையிருப்பு...