- நாகப்பட்டினம்
- ஆட்சியர்
- கில்வேலூர்
- பொது குறை மறுசீரமைப்பு நாள்
- நாகப்பட்டினம் மாவட்ட ஆட்சியர் அலுவலகம்
- வருவாய்
- அதிகாரி
- பவனந்தி
- குறை தீர்க்கும் நாள்
*467 மனுக்கள் குவிந்தது
கீழ்வேளூர் : நாகப்பட்டினம் மாவ ட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வாராந்திர மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் திங்கட்கிழமை மாவட்ட வருவாய் அலுவலர் பவணந்தி தலைமையில் நடை பெற்றது.
இந்த குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் பொதுமக்களிடமிருந்து வங்கிக் கடன், உதவித்தொகை, குடும்ப அட்டை, வேலைவாய்ப்பு மற்றும் கல்வி உதவித் தொகை உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை முன் வைத்து மொத்தம் 467 மனுக்கள் பெறப்பட்டுள்ளது.
பெறப்பட்ட மனுக்கள் மீது விரைந்து நடவடிக்கை மேற்கொள்ள சம்பந்தப்பட்ட அலுவலர்களுக்கு மாவட்ட வருவாய் அலுவலர் அறிவுறுத்தினார்.
அதனைத்தொடர்ந்து, மாற்றுத் திறனாளிகள் நலத்துறை சார்பில் 2 நப ர்களுக்கு மாற்றுத்திறனாளிகளுக்கான தேசிய அடையாள அட்டையும், 1 மாற்றுத்திறனாளிக்கு ஊன்று கோலையும் மாவட்ட வருவாய் அலுவலர் வழங்கினார். இக்கூட்டத்தில் மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் அரங்கநாதன், மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் கார்த்திகேயன், மற்றும் அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

