தேனி, மார்ச் 10: தேனி அருகே ரங்கபுரம் கிராமத்தில் வசிப்பவர் ஐயப்பன் 72). ஓய்வு பெற்ற விஏஓ. சென்னையில் வசிக்கும் இவரது மகளை பார்க்க கடந்த மாதம் ஐயப்பன் மனைவியுடன் வீட்டை பூட்டி, சாவியை அருகே உள்ள உறவினர் வீட்டில் ஒப்படைத்துவிட்டு சென்றார்.
இந்நிலையில் நேற்று முன்தினம் வீட்டின் கதவு திறந்து கிடப்பதாக கிடைத்த தகவலை அடுத்து, அவர் திரும்பி வந்தார். அப்போது பீரோவில் இருந்த ஐந்து பவுன் தங்க செயின், தங்க காசுகள், ரூ. ஒரு லட்சம் ரொக்கம், வெள்ளி குத்து விளக்குகள், கலர் டிவி உள்ளிட்டவை திருடுபோனது தெரிய வந்தது. இதுகுறித்து ஐயப்பன் அளித்த புகாரின் பேரில் வீரபாண்டி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
