×

இறந்த நிலையில் கரை ஒதுங்கிய கடல் ஆமை

 

திருவாடானை, மார்ச் 10: திருவாடானை அருகே உள்ள புதுப்பட்டினம் கடற்கரை கிராமத்தில் சுமார் 10 கிலோ எடையுள்ள அரிய வகை கடல் ஆமை ஒன்று இறந்த நிலையில் கரை ஒதுங்கியது. இது குறித்து அப்பகுதி பொதுமக்கள் மற்றும் மீனவர்கள் கடலோர வனத்துறையினருக்கு உடனடியாக தகவல் தெரிவித்தனர். அரிய வகை கடல்வாழ் உயிரினமான இந்த ஆமை எவ்வாறு உயிரிழந்தது என்பது குறித்து வனத்துறை அதிகாரிகள் ஆய்வு செய்து வருகின்றனர்.

Tags : Thiruvadanaai ,Pudupattinam ,
× RELATED 100 நாள் வேலை திட்ட குறை தீர்ப்பாளர் நியமனம்