வரிச்சியூர் செல்வம் கைது

 

மேலூர், மார்ச் 10: மேலூரை சேர்ந்தவர் சாமிநாதன். இவருக்கும், மற்றொருவருக்கும் இடப்பிரச்னை இருந்து வந்ததாகவும், இதில் சாமிநாதனுக்கு பணம் கிடைக்கவில்லை எனவும் கூறப்படுகிறது. இதனால் சாமிநாதன் மதுரையை சேர்ந்த வரிச்சியூர் செல்வத்தை சந்தித்து தனக்கு பணத்தை பெற்று தரும்படி கூறியுள்ளார். இதை தொடர்ந்து வரிச்சியூர் செல்வம் இருதரப்பையும் அழைத்து பேச்சுவார்த்தை நடத்தி இருவரிடமும் பணம் பெற்று கொண்டதாக தெரிகிறது. ஆனால் வரிச்சியூர் செல்வம் சாமிநாதனிடம் கூறியபடி பணத்தை பெற்று தரவில்லை. இதுகுறித்து சாமிநாதன் ஐகோர்ட் மதுரை கிளையில் வழக்கு தொடர்ந்தார். இதையடுத்து கோர்ட் உத்தரவின்பேரில் நேற்று மேலூர் போலீசார் வரிச்சியூர் செல்வத்தை அழைத்து விசாரணை நடத்தினர். இதில் பணம் பெற்று கொண்டது தெரியவரவே போலீசார் வரிச்சியூர் செல்வத்தை கைது செய்து மாஜிஸ்திரேட் முன்பு ஆஜர்படுத்தினர்.

Related Stories: