மல்லாங்கிணறு பேரூராட்சியில் கலைஞர் விளையாட்டு உபகரணங்கள் அமைச்சர் வழங்கினார்

 

காரியாபட்டி, மார்ச் 10: மல்லாங்கிணறு பேரூராட்சி அனைத்து வார்டுகளுக்கும் கலைஞர் விளையாட்டு உபகரணங்களை அமைச்சர் தங்கம்தென்னரசு வழங்கினார். தமிழ்நாட்டில் நகர்ப்புற மற்றும் கிராமப்புற இளைஞர்களின் விளையாட்டு திறனை ஊக்குவிக்கும் வகையில் தமிழ்நாடு அரசு டாக்டர் கலைஞர் விளையாட்டு உபகரணங்கள் வழங்கும் திட்டத்தை முதல்வர் மு.க. ஸ்டாலின் தொடங்கி வைத்தார். இந்த திட்டத்தின் கீழ் மல்லாங்கிணறு பேரூராட்சிக்குட்பட்ட 15 வார்டுகளுக்கும் விளையாட்டு பொருட்கள் அடங்கிய தொகுப்பு வழங்கும் விழா மல்லாங்கிணறு பேரூராட்சி அலுவலக வளாகத்தில் நடைபெற்றது. விழாவில் நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு கலந்து கொண்டு கலைஞர் விளையாட்டு உபகரணங்களை வழங்கினார். பேரூராட்சி தலைவர் துளசிதாஸ், துணைத் தலைவர் மிக்கேல் அம்மாள், செயல் அலுவலர் அன்பழகன் மற்றும் பேரூராட்சி கவுன்சிலர்கள், பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்.

 

Related Stories: