- பொத்தகலன்விளை பள்ளி
- சாத்தான்குளம்
- பொட்டகாலன்விளை புனித வளனார் தொடக்கப்பள்ளி
- தூத்துக்குடி
- தெற்கு
- மாவட்டம்…
சாத்தான்குளம், மார்ச் 10: சாத்தான்குளம் அருகே உள்ள பொத்தகாலன்விளை புனித வளனார் தொடக்கப் பள்ளியில் தூத்துக்குடி எம்பி கனிமொழி தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து ரூ.36 லட்சம் மதிப்பீட்டில் இரு வகுப்பறை கட்டப்பட்டு திறப்பு விழா நடந்தது. தூத்துக்குடி தெற்கு மாவட்ட திமுக செயலாளரும், மீன்வளம்- மீனவர் நலன் மற்றும் கால்நடை பராமரிப்பு துறை அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் தலைமை வகித்து புதிய கட்டிடங்களை திறந்து வைத்து வகுப்பறையில் குத்துவிளக்கு ஏற்றினார்.
திருச்செந்தூர் ஆர்டிஓ கவுதம் முன்னிலை வகித்தார். தலைமை ஆசிரியை அருட்சகோதரி பெரியநாயகி வரவேற்றார். பொத்தகாலன்விளை புனித திருக்கல்யாண மாதா திருத்தல அதிபரும், பள்ளித் தாளாளர் ஜஸ்டின் அடிகளார் ஆரம்ப ஜெபம் நடத்தினார். தொடர்ந்து அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன், பொதுமக்களிடம் மனுக்கள் பெற்றார். பள்ளி வளாகத்தில் மரக்கன்றுகள் நடப்பட்டது. விழாவில் பிடிஓக்கள் வாவாஜி பக்கீர் முகமது, பாலமுருகன், மாநில திமுக வர்த்தக பிரிவு துணை செயலாளர் உமரிசங்கர், ஒன்றிய செயலாளர்கள் பாலமுருகன், ஜோசப், பொன்முருகேசன், மாவட்ட திமுக இளைஞரணி அமைப்பாளர் ராமஜெயம், ஆழ்வார்திருநகரி ஒன்றிய முன்னாள் சேர்மன் ஜனகர், மாவட்ட வழக்கறிஞர் பிரிவு செயலாளர் செல்வகுமார், துணை அமைப்பாளர் கிருபாகரன், காயல்பட்டினம் கூட்டுறவு சங்க முன்னாள் தலைவர் அசரத், மாநில பொதுக்குழு உறுப்பினர் இந்திரகாசி, முன்னாள் பொதுக்குழு உறுப்பினர் பசுபதி, குலசேகரன்பட்டினம் முத்தாரம்மன் கோயில் அறங்காவலர் குழு தலைவர் கண்ணன், சாஸ்தாவிநல்லூர் விவசாய நலச் சங்க தலைவர் எட்வின் காமராஜ் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
