கோவில்பட்டி, மார்ச் 9: கோவில்பட்டி அருகே அடையாளம் தெரியாத வாகனம் மோதியதில் புள்ளிமான் உயிரிழந்தது. கோவில்பட்டி அருகே மதுரை – நெல்லை தேசிய நெடுஞ்சாலையில் பெத்தேல் பகுதியில் ஒரு வயது புள்ளிமான் அடையாளம் தெரியாத வாகனம் மோதி உயிரிழந்து கிடந்தது. இதுகுறித்து அவ்வழியாக சென்ற வாகன ஓட்டிகள், வனத்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். வனத்துறையினர் சம்பவ இடம் சென்று புள்ளிமான் உடலை எடுத்துச் சென்றனர். கடந்த சில வாரங்களுக்கு முன்பு இதே இடத்தில் ஒரு புள்ளிமான் அடையாளம் தெரியாத வாகனம் மோதி அடிபட்டு உயிரிழந்து கிடந்தது குறிப்பிடத்தக்கது.
