×

அம்பை அருகே காதல் மனைவிக்கு அரிவாள் வெட்டு: தப்பியோடிய கணவருக்கு வலை

 

அம்பை, மார்ச் 9: அம்பை அருகே காதல் மனைவியை அரிவாளால் வெட்டிவிட்டு தப்பிய கணவரை போலீசார் தேடி வருகின்றனர்.  நெல்லை மாவட்டம் அம்பாசமுத்திரம் அடுத்துள்ள பொன்நகர் பகுதியைச் சேர்ந்தவர் சிவா. இவரது மனைவி இசக்கியம்மாள்(32). இவர்கள் இருவரும் கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு காதலித்து திருமணம் செய்து கொண்டனர். அம்பை பூக்கடை பஜார் பகுதியில் உள்ள வெவ்வேறு கடைகளில் இருவரும் பூ கட்டும் வேலை பார்த்து வந்தனர்.

இவர்களுக்கு முகுந்தன் (9) என்ற மகனும், நிக்கிஷா (4) என்ற மகளும் உள்ளனர்.குடும்ப பிரச்னை தொடர்பாக கணவன்-மனைவிக்கு இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்ததாக கூறப்படுகிறது. இதனால் மனமுடைந்த இசக்கியம்மாள், கடந்த சில மாதங்களாக கணவரைப் பிரிந்து அதேபகுதியில் உள்ள தனது தந்தை வீட்டில் வசித்து வந்தார்.இந்நிலையில் நேற்று காலை ஹெல்மெட் அணிந்து முகத்தை மறைத்தபடி அங்கு வந்த சிவா, மனைவியை வழிமறித்து சரமாரியாக அரிவாளால் வெட்டினார். ரத்த வெள்ளத்தில் இசக்கியம்மாள் சரிந்ததும், சிவா அங்கிருந்து தப்பி ஓடிவிட்டார்.

Tags : Kadhal ,Ambai ,Siva ,Ponnagar ,Ambasamudram ,Nellai district ,Isakkiyammal ,
× RELATED சர்வதேச மகளிர் தின விழா 1000 பேருக்கு நலத்திட்ட உதவிகள்