சென்னை: பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வு 11ம் தேதி தொடங்கி ஏப்ரல் 4ம் தேதி முடிகின்றன. இந்த தேர்வில் தமிழ்நாடு, புதுச்சேரியை சேர்ந்த 9 லட்சத்து 9 ஆயிரம் மாணவ மாணவியர் எழுத உள்ளனர். தமிழகம் மற்றும் புதுச்சேரியில் இயங்கும் 12 ஆயிரத்து 467 பள்ளிகளை சேர்ந்த மாணவ மாணவியர் இந்த தேர்வில் பங்கேற்க இருக்கின்றனர். 4219 தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. 4954 பறக்கும் படையினரும், நிலைக்குழுக்களும் அமைக்கப்பட்டுள்ளன.
தேர்வு அறைக் கண்காணிப்பாளர்களாக 49 ஆயிரத்து 542 கல்வி அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர்.
மாற்றுத் திறன் மற்றும் டிஸ்லெக்சியாக பிரச்னை உள்ளவர்கள் தேர்வில் சொல்வதை எழுதுவதற்காக 12 ஆயிரத்து 292 பேர் நியமிக்கப்பட்டுள்ளனர். சிறைவாசிகளில் இப்பிரச்னை உள்ளவர்களுக்காக சொல்வதை எழுத 395 பேர் நியமிக்கப்பட்டுள்ளனர்.
