ஆல்ஃபாபெட் நிறுவனத்தின் தலைமைச் செயல் அதிகாரியான சுந்தர் பிச்சை, அடுத்த 3 ஆண்டுகளுக்கான ஊதியமாக சுமார் ரூ.6,300 கோடி பெற உள்ளார். தமிழ்நாட்டைச் சேர்ந்த சுந்தர் பிச்சை, கடந்த 2004ம் ஆண்டு கூகுள் நிறுவனத்தில் பணியில் சேர்ந்து, அதன் தாய் நிறுவனமான ஆல்ஃபாபெட்டின் தலைமை செயல் அதிகாரியாக உயர்ந்துள்ளார்.
