×

செங்கல்பட்டு அருகே குழாய் உடைந்து வீணாகும் பாலாறு நீர்: நடவடிக்கை எடுக்க வலியுறுத்தல்

செங்கல்பட்டு: செங்கல்பட்டு-காஞ்சிபுரம் சாலையில் உள்ள தேவனூர் பாலாற்று பகுதியில், பல்வேறு கிராமப் பகுதிகளுக்கு செல்லும் பாலாற்று குடிநீர் பைப்லைனின் 2 இடங்களில் உடைப்பு ஏற்பட்டு, சாலை முழுவதும் மக்களுக்கு பயன்பட வேண்டிய குடிநீர் சுமார் 20 அடி உயரத்துக்கு தண்ணீர் பீய்ச்சி அடித்தபடி வீணாக வெளியேறி வருகிறது.

இதுகுறித்து சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளிடம் பலமுறை புகார் தெரிவித்தும், பைப்லைன் உடைப்பை சரிசெய்யும் நடவடிக்கை எடுப்பதில் அதிகாரிகள் அலட்சியம் காட்டி வருவதாக கூறப்படுகிறது. இதனால் செங்கல்பட்டு அருகே தேவனூர், வில்லியம்பாக்கம், ரெட்டிபாளையம், பாலூர், கொளத்தாஞ்சேரி, கொங்கனாஞ்சேரி, உள்பட 10க்கும் மேற்பட்ட கிராமங்களில் குடிநீர் தட்டுப்பாடு அபாயம் ஏற்பட்டுள்ளது. எனவே, இப்பிரச்னையின் தீவிரத்தை கருத்தில் கொண்டு, பாலாற்று குடிநீர் பைப்லைனில் ஏற்பட்டுள்ள உடைப்புகளை சரிசெய்து, சீரான குடிநீர் வினியோகத்துக்கு மாவட்ட கலெக்டர் மற்றும் சம்பந்தப்பட்ட துறை உயர் அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் வலியுறுத்துகின்றனர்.

Tags : Chengalpattu ,Devanur Palatu ,Chengalpattu-Kanchipuram road ,Balatu ,
× RELATED ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில்...