×

கோவை மாணவி பலாத்காரம் வழக்கில் இன்று தீர்ப்பு

கோவை: கோவை பீளமேட்டில் காதலருடன் காரில் அமர்ந்து பேசிக்கொண்டு இருந்த கல்லூரி மாணவி கடந்த ஆண்டு நவம்பர் மாதம் வாலிபர்கள் 3 பேரால் கூட்டு பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டார். இதில் தொடர்புடைய சிவகங்கை மாவட்டம், சிங்கம்புணரியை சேர்ந்த கருப்பசாமி (30), அவரது சகோதரர் காளீஸ்வரன் (21), மதுரையை சேர்ந்த அவர்களது உறவினர் தவசி (20) ஆகிய 3 பேரை போலீசார் காலில் சுட்டுப்பிடித்து கைது செய்தனர்.

தமிழகம் முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்திய இந்த வழக்கு விசாரணை கோவை அனைத்து மகளிர் நீதிமன்றத்தில் நடந்தது. முதல்வர் மு.க.ஸ்டாலின் இந்த வழக்கை விரைந்து முடிக்க உத்தரவிட்டிருந்தார். அதன்படி, மூவர் மீதும் 250 பக்க குற்றப்பத்திரிகை கோர்ட்டில் தாக்கல் செய்யப்பட்டது. 72 பேரிடம் சாட்சி விசாரணை நடந்தது. அனைத்து தரப்பு வாதங்களும் கடந்த மாதம் 27ம் தேதி முடிவடைந்து மார்ச் 7ம் தேதி (இன்று) தீர்ப்பு வழங்கப்படும் என நீதிபதி சுந்தராஜன் அறிவித்தார். அதன்படி, இன்று மகளிர் நீதிமன்றத்தில் தீர்ப்பு அளிக்கப்பட உள்ளது.

Tags : Coimbatore ,Peelamedu ,Karuppasamy ,Singampunari, Sivaganga district ,
× RELATED பள்ளி மாணவர்களுக்கான பிரத்யேக...