×

அசாமில் அடிக்கல் நாட்டல் இந்தியாவின் முதல் நதி கலங்கரை விளக்கங்கள்

கவுகாத்தி: இந்தியாவில் சுமார் 14,500 கிமீ நீளமுள்ள நதிகள், கால்வாய்கள் மற்றும் கடல்சார் ஏரிகள் உள்நாட்டு நீர்வழி போக்குவரத்திற்கு பயன்படுத்தப்படுகிறது. நீர்வழிப்பாதையில் ஒரு டன் சரக்குகளை கொண்டு செல்ல சாலை போக்குவரத்தில் 3ல் 1 பங்கும் ரயிலுடன் ஒப்பிடுகையில் பாதி மட்டுமே செலவாகும். எனவே நீர்வழிப்பாதை சரக்கு போக்குவரத்து செலவு குறைந்ததாக இருப்பதோடு சுற்றுச்சூழலுக்கு ஏற்படும் பாதிப்பையும் குறைக்கிறது.

இந்நிலையில், உள்நாட்டு நீர்வழிப்பாதைகளில் சரக்கு கப்பல்களுக்கு வழிகாட்ட உதவும் வகையில் இந்தியாவில் முதல் முறையாக கலங்கரை விளக்கங்கள் அமைக்கப்பட உள்ளன. இதன்படி அசாமின் திப்ரூகர் மாவட்டத்தில் உள்ள போகிபீல், கம்ரூப் நகரில் உள்ள பாண்டு, நாகோன் மாவட்டத்தில் சில்காட் மற்றும் பிஸ்வநாத்தில் உள்ள பிஸ்வநாத் காட் ஆகிய இடங்களில் 4 கலங்கரை விளக்கங்கள் கட்டப்பட உள்ளன.

இதற்காக கவுகாத்தியில் நேற்று நடந்த நிகழ்ச்சியில் ஒன்றிய துறைமுகங்கள், கப்பல் போக்குவரத்து அமைச்சர் சர்பானந்த சோனோவால் அடிக்கல் நாட்டினார். 4 கலங்கரை விளக்கங்களும் ரூ.84 கோடியில் கட்டப்பட உள்ளன.

Tags : India ,Assam ,Guwahati ,
× RELATED பல்வேறு மசோதாக்களை நிறுத்திவைத்து...