பீஜிங்: பாதுகாப்பு படைகளின் நவீன மயமாக்கலை விரைவுபடுத்த சீனா தனது ராணுவ பட்ஜெட்டை 7 % உயர்த்தியுள்ளது. இந்த ஆண்டுக்கு மட்டும் ரூ.25 லட்சம் கோடி ஒதுக்கியுள்ளது. சீன நாடாளுமன்ற கூட்டம் நேற்று நடந்தது. இதில் அதிபர் ஜி ஜின்பிங், பிரதமர் லி கியாங் உள்ளிட்ட தலைவர்கள் கலந்து கொண்டனர். இந்த கூட்டத்தில் பிரதமர் லி கியாங் வருடாந்திர பணி அறிக்கையை சமர்ப்பித்தார். அதில்,2026 நிதியாண்டிற்கான பாதுகாப்பு செலவினங்களை, 7 % உயர்த்துவதற்கு முன்மொழிந்தார்.
பாதுகாப்பு படைகளின் நவீன மயமாக்கலை விரைவுபடுத்தும் விதத்தில் துறையின் செலவினங்களுக்காக ரூ.25 லட்சம் கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. ராணுவத்திற்கு அதிகமாக செலவிடும் நாடுகளில் அமெரிக்கா முன்னணியில் உள்ளது. அந்த நாடு ராணுவத்திற்கு ரூ.82 லட்சம் கோடி செலவிடுகிறது. அதற்கு அடுத்த இடத்தில் சீனா உள்ளது. இந்தியா ரூ.7.85 லட்சம் கோடி ஒதுக்கியுள்ளது. சீனாவின் பாதுகாப்புச் செலவு இந்தியாவை விட மூன்று மடங்கு அதிகமாகும்.
