ஈரானின் 80 சதவீத வான் பாதுகாப்பு அமைப்பு அழிப்பு

இஸ்ரேல் ராணுவ தளபதி லெப்டினன்ட் ஜெனரல் இயல் ஜமீர் கூறுகையில் ‘‘ஈரானின் வான் பாதுகாப்பு அமைப்புகளில் 80 சதவீதம் மற்றும் பாலிஸ்டிக் ஏவுகணை தளங்களில் 60 சதவீதம் வரை அழிக்கப்பட்டு விட்டது’’ என்றார். அதேபோல் அமெரிக்க கடற்படையின் அதிகாரி அட்மிரல் பிராட் கூப்பர் வெளியிட்ட அறிக்கையில், ‘வளைகுடா கடலில் நிறுத்தப்பட்டிருந்த ஈரானின் மிகப்பெரிய டிரோன் தாங்கி கப்பல் மீது குண்டு வீசப்பட்டு தற்போது அது தீப்பிடித்து எரிகிறது’ என்று தெரிவித்துள்ளார். ஈரானின் வான் எல்லையை முழுமையாக தங்கள் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்துள்ளதாக இஸ்ரேல் ராணுவம் அறிவித்துள்ளது.

Related Stories: