×

பிளஸ் 1 அரியர் பொதுத் தேர்வு 3,576 பேர் தேர்வு எழுதவில்லை

சென்னை: பிளஸ் 1 அரியர் பொதுத் தேர்வுக்கு 8,752 பேர் விண்ணப்பித்திருந்த நிலையில், 5,176 மாணவர்கள் மட்டுமே தேர்வில் கலந்துகொண்டனர். 2018ம் ஆண்டு முதல் பிளஸ் 1 வகுப்புக்கு பொதுத்தேர்வு நடத்தப்பட்டு வந்தது. மாணவர்களுக்கான அழுத்தத்தை குறைக்கும் விதமான அந்த தேர்வு நடப்பாண்டு முதல் ரத்து செய்யப்பட்டது. எனினும், முந்தைய ஆண்டுகளில் பிளஸ் 1 பொதுத்தேர்வில் தோல்வியடைந்த மாணவர்கள் அந்த பாடங்களை அரியர் தேர்வாக எழுத வேண்டுமென தேர்வுத்துறை அறிவித்தது.

நடப்பாண்டு பிளஸ் 1 அரியர் தேர்வெழுத 19,107 மற்றும் தனித்தேர்வர்கள் 5,944 என 25,051 பேர் விண்ணப்பித்தனர்.  பிளஸ் 1 அரியர் பொதுத் தேர்வு நேற்று தொடங்கியது. முதல்நாள் தமிழ் உள்பட மொழிப் பாடங்களுக்கான தேர்வுகள் நடந்தன. தேர்வெழுத 8,752 பேர் விண்ணப்பித்திருந்தனர். அதில் 5,176 மாணவர்கள் மட்டுமே தேர்வில் கலந்துகொண்டனர். 3,576 பேர் தேர்வில் பங்கேற்வில்லை. இதில் தமிழ் வினாத்தாள் சற்று கடினமாக இருந்ததாக தேர்வர்கள் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

 

Tags : Chennai ,
× RELATED இஸ்ரேல், அமெரிக்கா – ஈரான்...