தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் தேதி அடுத்த வார இறுதியில் அறிவிக்கப்பட வாய்ப்பு..!!

டெல்லி: தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் தேதி அடுத்த வார இறுதியில் அறிவிக்கப்பட வாய்ப்பு உள்ளது. 5 மாநிலங்களில் சட்டப்பேரவை தேதியின் ஒத்திகை தேர்தல் என்பது விரைவில் வர இருக்கக்கூடிய நிலையில் அது தொடர்பான அறிவிப்புகள் அடுத்த வர இறுதியில் அறிவிப்பாக வெளியிடப்படும் என்ற ஒரு தகவல் தேர்தல் ஆணையம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக தலைமை தேர்தல் ஆணையர் குழுவானது 5ம் தேதி இரவு கேரளா மாநிலத்திற்கு சென்று 6 மற்றும் 7 ஆகிய தேதிகளில் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்திய பின்னர் 9 மற்றும் 10 ஆகிய தேதிகளில், மேற்குவங்க மாநிலத்திற்கு நேரடியாக சுற்று பயணத்தை மேற்கொள்ள உள்ளனர்.

ஏற்கனவே தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் அசாமினுடைய சுற்று பயணங்கள் அதிகாரப்பூர்வமாக முடிவடைந்து அறிக்கைகளையும் தயார் செய்து வைத்திருக்கும் நிலையில் தான் இறுதிக்கட்ட பணிகளை தற்பொழுது எட்டியுள்ளதாக தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. குறிப்பாக தேர்தலுடைய வரைவு தேதி பட்டியல் என்பது அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளதாகவும், 10ஆம் தேதி மேற்கு வங்கத்தினுடைய சுற்றுப்பயணம் முடிந்து டெல்லி திரும்பும் ஆணையர்கள் குழு ஆலோசனை நடத்தி அதன் பிறகு தேர்தல் தேதியை அறிவிப்பதற்காக ஒரு திட்டத்தை வகுத்துள்ளதாகவும் இந்திய தலைமை தேர்தல் ஆணையமானது தெரிவித்துள்ளது.

அதுமட்டுமில்லாமல் மேற்குவங்கத்தில் 5 முதல் 7 கட்டமாக தேர்தல் நடத்துவதற்கான ஒரு ஆலோசனை உள்ளதாகவும், தமிழ்நாடு உள்ளிட்ட மற்ற நான்கு மாநிலங்களில் ஒரே கட்டமாகவும், ஒரே நாளிலும் தேர்தல் நடத்துவதற்கான ஒரு பரிசீலனை அடிப்படையில் ஒரு வரைவு பட்டியலை அவர்கள் தயாரித்து வைத்துள்ளதாகவும் இந்திய தேர்தல் ஆணையர் தெரிவித்துள்ளனர்.

இறுதிக்கட்ட பணிகள் என்பது எட்டப்பட்டுள்ளது எந்தெந்த மாநிலங்களுக்கு எவ்வளவு பாதுகாப்பு பணியாளர்களை அனுப்பப்பட வேண்டும், எந்தெந்த அதிகாரிகள் முழுவீச்சில் தேர்தல் பணியில் ஈடுபடவுள்ளார்கள் அணைத்து விவரங்களும் இறுதி செய்யப்பட்டுள்ளது. அதன் அடிப்படையில் தேதியின் அறிவிப்புகள் மட்டும் எஞ்சி உள்ளது என்று ஒரு தகவலையும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இரண்டு மாநிலங்கள் கேரளா மற்றும் மேற்குவங்கத்தின் சுற்று பயணத்திற்கு பிறகு தமிழ்நாடு உள்ளிட்ட 5 மாநிலங்களுக்கான சட்டப்பேரவை தேதிகள் என்பது அடுத்த வர இறுதியில் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படவுள்ளதாகவும் இந்திய தேர்தல் ஆணையத்தினுடைய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

Related Stories: