×

செஞ்சி அருகே சாலையோர கிணற்றில் கார் கவிழ்ந்து 3 பேர் உயிரிழப்பு..!!

விழுப்புரம்: செஞ்சி அடுத்து அலம்பூண்டி என்ற இடத்தில் கட்டுப்பாட்டை இழந்த கார் சாலையோர கிணற்றில் விழுந்து விபத்து ஏற்பட்டது. பௌர்ணமி என்பதால் சென்னையில் இருந்து நந்திவரம் சென்ற வழக்கறிஞர் திருவண்ணாமலை சென்றதாக கூறப்படுகிறது. காரில் சென்றவர்கள் பற்றி முழு தகவல் கிடைக்கவில்லை, அவர்கள் பொர்ணமி கிரிவலத்த முடித்துவிட்டு அதிகாலை ஒரு 7 மணியளவிற்கு அலம்பூண்டி அருகே வாகனம் வந்துகொண்ட போது கார் கட்டுப்பாட்டை இழந்து சாலையோர விவசாயம் நிலத்தில் சுமார் 50அடி தூரத்திற்கு வேகமாக இடித்துக்கொண்டு தடுப்பு சுவர் மீது மோதி விவசாய கிணற்றுக்குள் மூழ்கியது.

இதனைக்கண்டு அதிர்ச்சி அடைந்த அப்பகுதி மக்கள் போலீசாருக்கும், தீயணைப்புத்துறையினருக்கும் தகவல் குடுத்த நிலையில், சுமார் 8 மணி முதல் 3 மணி நேரமாக வாகனத்தை மீட்க மிகவும் போராடினார்கள். கிணற்றில் இருந்து காரை மீட்டு பார்த்தபோது 3 பேர் பலத்த காயங்களுடன் கார் குள்ள உயிரிழந்த நிலையில் மீட்கப்பட்டுள்ளன. இந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மேலும் இறந்தவர்கள் விவரம் குறித்து போலீசார் தீவிரமாக விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். அதிகாலை கோரவிபத்து சம்பவம் இப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Tags : Senchi ,Villupuram ,Alampoondi ,Nandhivaram ,Chennai ,Pournami ,Tiruvannamalai ,
× RELATED திமுக – காங்கிரஸ் தொகுதி பங்கீடு...