ஒருங்கிணைந்த சென்னை மாவட்ட தி.மு.க. வழக்கறிஞர் அணி உறுப்பினர்கள் ஆலோசனைக் கூட்டம்!

 

சென்னை: ஒருங்கிணைந்த சென்னை மாவட்ட தி.மு.க. வழக்கறிஞர் அணி உறுப்பினர்கள் ஆலோசனைக் கூட்டம் நடைபெறவுள்ளது. இது தொடர்பாக கழக சட்டத்துறைச் செயலாளர் என்.ஆர்.இளங்கோ, எம்.பி., அறிக்கை வெளியிட்டுள்ளார். ஒருங்கிணைந்த சென்னை மாவட்ட தி.மு.க. வழக்கறிஞர் அணி உறுப்பினர்கள் ஆலோசனைக் கூட்டம் 3-3-2026 செவ்வாய்க்கிழமை மாலை 4.00 மணி அளவில், சென்னை, தேனாம்பேட்டை, அண்ணா அறிவாலயம் கலைஞர் அரங்கத்தில் சட்டத்துறைத் தலைவர் மூத்த வழக்கறிஞர் இரா.விடுதலை அவர்கள் தலைமையில் – கழக சட்டத்துறை இணைச் செயலாளர்கள் – துணைச் செயலாளர்கள் – தலைமைக் கழக வழக்கறிஞர்கள் ஆகியோர் முன்னிலையில் நடைபெறும்.

அதுபோது சென்னை வடக்கு, சென்னை வடகிழக்கு, சென்னை கிழக்கு, சென்னை மேற்கு, சென்னை தென்மேற்கு, சென்னை தெற்கு ஆகிய மாவட்டங்களைச் சேர்ந்த கழக வழக்கறிஞர்கள் அனைவரும் தவறாது கலந்து கொள்ளுமாறு கேட்டுக் கொள்கிறேன். இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

Related Stories: