எத்தன வருஷம்தான் வெயிட் பண்றது…. மேடையில் வைத்தே மோடிக்கு எதிராக கொந்தளித்த ரங்கசாமி

புதுச்சேரி லாஸ்பேட்டை ஹெலிபேடு மைதானத்தில் நேற்று நடந்த அரசு விழாவில் பிரதமர் மோடி கலந்து கொண்டு ரூ.2,714 கோடிக்கு பல்வேறு வளர்ச்சி திட்ட பணிகளை துவக்கி வைத்தார். இவ்விழாவில் முதல்வர் ரங்கசாமி பேசியதாவது: தேஜ கூட்டணி அரசு பொறுப்பேற்ற பிறகு விவசாயிகள், ஆதிதிராவிட மக்களுக்கான அனைத்து திட்டங்களையும் செயல்படுத்தியுள்ளது.

புதுச்சேரி சிறிய மாநிலமாக இருந்தாலும், சமூக நலத்திட்டங்கள் முழுமையாக செயல்படுத்தி வருகிறது. இதனை எல்லா மாநிலங்களும் வியந்து பாராட்டுவதை அறியலாம். இருந்தாலும் எங்களது சிறிய கோரிக்கை, சிறிய வலி, வருத்தம் உண்டு. எத்தனை திட்டங்களை கொண்டு வந்து செயல்படுத்தினாலும், மாநில அந்தஸ்து, தனி அதிகாரம் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசுக்கு இருக்க வேண்டும் என்பது எங்களது கோரிக்கை.

பல ஆண்டுகளாக மக்கள் விரும்பியவாறு மாநில அந்தஸ்து வேண்டும். சட்டமன்றத்தில் 13 முறை மாநில அந்தஸ்து தீர்மானம் நிறைவேற்றி ஒன்றிய அரசுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. தேர்ந்தெடுக்கப்பட்ட அரசுக்கு தேவையான அதிகாரம் வேண்டும் என்பது மக்களின் நீண்ட நாள் கோரிக்கையாகும். இந்த கோரிக்கையை பிரதமர் ஏற்று மாநில அந்தஸ்து கொடுக்க வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.

Related Stories: