ஈரான் உச்ச தலைவர் காமெனி உயிரிழப்பு: ஈரான் ராணுவமும், காவல் படை எச்சரிக்கை!

 

ஈரான்: ஈரான் உச்ச தலைவர் காமெனி இறந்துவிட்டதை அந்நாட்டு அரசு ஊடகம் உறுதிப்படுத்தியுள்ளது. ஈரான் உச்ச தலைவர் காமெனி கொல்லப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ள நிலையில் பதற்றம் அதிகரித்துள்ளது. இஸ்ரேல் தாக்குதலில் காமெனி குடும்பமே கொல்லப்பட்டுள்ள நிலையில், உச்சக்கட்ட பதற்றம் ஏற்பட்டுள்ளது. இஸ்ரேல் தாக்குதலின்போது டெஹ்ரானில் உள்ள தனது அலுவலகத்தில் காமெனி இருந்துள்ளார் என ஈரான் ஊடகங்கள் தகவல் தெரிவித்துள்ளது. இதற்குமுன் இஸ்ரேல் – அமெரிக்கா தாக்குதலில், ஈரான் உச்சத் தலைவர் காமெனி கொல்லப்பட்டதாக அதிபர்கள் ட்ரம்ப், நெதன்யாகு கூட்டாக அறிவித்திருந்தனார்.

காமெனி கொல்லப்பட்டதன் மூலம் ஈரான் மக்களுக்கு நீதி கிடைத்துள்ளதாக ட்ரம்ப் பெருமிதம் தெரிவித்தார். ஈரான் மக்கள் தங்களது நாட்டை மீட்க இது ஒரே ஒரு சந்தர்ப்பம் எனவும் கருத்து தெரிவித்திருந்தார். இருப்பினும், இதற்கு மறுப்பு தெரிவித்துள்ளது ஈரான் பாதுகாப்புத் துறை, காமெனி உள்பட தலைவர்கள் பாதுகாப்பாக உள்ளதாக விளக்கம் அளித்திருந்தது. இந்நிலையில், ஈரான் உச்ச தலைவர் காமெனி இறந்துவிட்டதை அந்நாட்டு அரசு ஊடகம் உறுதிப்படுத்தியுள்ளது. அவருடைய மரணத்திற்கு 40 நாட்கள் துக்கம் அனுசரிக்கப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. 7 நாட்கள் பொது விடுமுறையும் அறிவிக்கப்பட்டுள்ளது.

தெஹரானில் இஸ்ரேல் நடத்திய தாக்குதலில், காமெனியின் மகள், மருமகன், மருமகள் மற்றும் பேரக்குழந்தை கொல்லப்பட்டதாக ஈரானிய அரசு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. உச்சத் தலைவர் காமெனியின் படுகொலை மாபெரும் குற்றம்; பதிலடி கொடுக்காமல் விடமாட்டோம் என ஈரான் அரசு தெரிவித்துள்ளது. பழிவாங்கும் நடவடிக்கை கடுமையாக இருக்கும் என ஈரான் ராணுவமும் எச்சரிக்கை விடுத்துள்ளது. இதைத்தொடர்ந்து, காமெனியின் கொலைக்கு காரணமானவர்கள் கொடூரமாக தண்டிக்கப்படுவார்கள். வரலாற்றிலேயே மிக மோசமான தாக்குதல் நடவடிக்கை எந்த நேரத்திலும் தொடங்கும் என்று ஈரான் காவல் படை எச்சரிக்கை விடுத்துள்ளது.

 

Related Stories: