×

ஸ்ரீவில்லிப்புத்தூர் – மதுரை அரசு பேருந்து கட்டணம் முன்னறிவிப்பு இன்றி உயர்த்தப்பட்டதாக வதந்தி பரவுகிறது: தமிழக அரசு

விருதுநகர்: ஸ்ரீவில்லிப்புத்தூர் – மதுரை அரசு பேருந்து கட்டணம் முன்னறிவிப்பு இன்றி உயர்த்தப்பட்டதாக வதந்தி பரவுகிறது என்று தமிழக அரசு தெரிவித்துள்ளது. ஸ்ரீவில்லிப்புத்தூர் – மதுரை பேருந்துக் கட்டணம் ரூ.100 ஆக உயர்த்தப்பட்டதாக வெளியான தகவலுக்கு தமிழக அரசு மறுப்பு தெரிவித்துள்ளது.

இது தொடர்பாக தமிழ்நாடு அரசு உண்மை சரிபார்ப்பகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில்;
பரவிய செய்தி

ஸ்ரீவில்லிப்புத்தூரில் இருந்து மதுரை செல்லும் அரசு பேருந்தின் கட்டணம் ரூ.75-ல் இருந்து ரூ.100-ஆக முன்னறிவிப்பின்றி உயர்த்தப்பட்டதாக சமூக வலைத்தளத்தில் பரப்பப்படுகிறது.

உண்மை என்ன?

இது குளிர்சாதன பேருந்து, சாதாரண பேருந்தே 75 ரூபாய் தான். அரசுப்போக்குவரத்துக்கழகம் இராஜபாளையம் கிளை மூலம் தடம் எண் 940A தடப்பேருந்து இராஜபாளையம் திருச்சி வழித்தடத்தில் குளிர்சாதன பேருந்து இயக்கம் செய்யப்பட்டு வருகிறது. அப்பேருந்திற்கு ஸ்ரீவில்லிபுத்தூரில் இருந்து மதுரைக்கு 28.01.2018 -ன்படி குளிர்சாதன பேருந்திற்குரிய பயணக்கட்டணம் ரூ.100 வசூலிக்கப்பட்டுள்ளது. கூடுதல் பயணக்கட்டணம் ஏதும் வசூலிக்கப்படவில்லை. சாதாரண பேருந்தில் ரூ.75 கட்டணமாக வசூலிக்கப்படுகிறது. எந்த கட்டண உயர்வும் செய்யப்படவில்லை’ என்று மதுரை போக்குவரத்துக் கழக (விருதுநகர் மண்டலம்) உதவி மேலாளர் விளக்கமளித்துள்ளார்.

Tags : Srivilliputhur-Madurai government ,Tamil Nadu government ,Virudhunagar ,Srivilliputhur ,Madurai ,
× RELATED தவெக தலைவர் விஜய்யின் மனைவி சங்கீதா...