×

விஜய்யுடன் இருக்கும் புகைப்படங்களை நடிகை வெளியிட்டு வருவது எனக்கும் எனது பிள்ளைகளுக்கும் அவமானத்தை தருகிறது: சங்கீதா வேதனை

செங்கல்பட்டு : தவெக தலைவர் விஜய்யின் மனைவி சங்கீதா விவாகரத்துக் கோரி மனுத் தாக்கல் செய்துள்ளார். கணவர் விஜய்யை பிரிந்து வாழ்ந்து வருவதாகக் கூறப்படும் நிலையில் விவாகரத்துக் கோரி சங்கீதா மனுத் தாக்கல் செய்துள்ளார்.சங்கீதா தனது மனுவில், “நடிகை ஒருவருடன் திருமணத்தை மீறிய உறவில் விஜய் இருப்பது ஏப்ரல் 2021ம் ஆண்டு எனக்கு தெரியவந்தது. இது வலியையும், மன உளைச்சலையும் கொடுத்தது. இது துரோகம் மற்றும் திருமண நம்பிக்கையை மீறுவதற்கு சமம். நான் இதை கண்டுபிடித்த பிறகும் இரக்கமே இல்லாமல் அந்த உறவை தொடர்ந்தார். இதனால் நான் மனதளவில் பெரிதும் பாதிக்கப்பட்டேன்.திருமணத்தை மீறிய அந்த உறவை தட்டிக் கேட்டதால், வீட்டில் எனக்கான உரிமைகளை விஜய் நிறுத்திவிட்டார். கட்டுப்பாடுகளையும் ஏற்படுத்தினார்.

விஜய் உடன் அடிக்கடி வெளிநாடு சென்று அங்கு எடுத்த புகைப்படங்களை ‘அந்த’ நடிகை சமூக ஊடகங்களில் பகிர்ந்ததால், அது என்னையும் எனது குழந்தைகளையும் மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளாக்கியது. எனக்கும் எனது, பிள்ளைகளுக்கும் அவமானத்தை தருகிறது. ஆனால், அந்த பதிவுகளுக்கு விஜய் மறுப்புத் தெரிவிக்காமல் மறைமுகமாக ஆதரித்தார். பொதுவெளியில் நன்மதிப்பை கெடுக்கக்கூடாது என்பதால் நடிகையின் பெயரை குறிப்பிடவில்லை. தேவைப்பட்டால் எனது கணவருடன் திருமணத்தை மீறிய உறவில் இருக்கும் நடிகையை வழக்கின் 2வது எதிர்மனுதாரராக சேர்ப்பேன். விஜய்யின் நடத்தை காரணமாக சமூக வலைத்தளங்களில் எழுந்த சர்ச்சையால் மனரீதியான சித்திரவதை அனுபவித்தேன். நெருக்கடி ஏற்படும் பட்சத்தில் நடிகைக்கும் எனது கணவருக்கும் உள்ள கள்ள உறவை வெளிப்படுத்தும் ஆதாரங்களை வழங்குவேன்.”இவ்வாறு தெரிவித்தார்.

Tags : Vijay ,Sangeeta Anand ,Chengalpattu ,Thaveka ,Sangeeta ,
× RELATED தவெக தலைவர் விஜய்யின் மனைவி சங்கீதா...