×

நல்லக்கண்ணு மறைவால் அதிர்ச்சியில் உறைந்த விகேபுரம் மூதாட்டி: தன்னை தோளில் தூக்கி சுமந்தவர் என உருக்கம்

 

விகேபுரம்: இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவரான நல்லக்கண்ணு நேற்று உயிரிழந்தார். இவர் தூய்மையான அரசியல்வாதியாக கடைசி வரை வாழ்ந்தார். அந்த வகையில் விகேபுரம் பகுதியில் வசித்து வரும் கம்யூனிஸ்ட் இயக்கத்தின் தீவிர விசுவாசியான சீதா என்ற மூதாட்டி நல்லக்கண்ணுவின் மறைவு கேட்டு அதிர்ச்சியில் உறைந்துள்ளார். சீதாவின் கணவர் அனந்தகிருஷ்ணனும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியில் தீவிரமாக செயல்பட்டவர். சுதந்திர போராட்டத்தில் பங்கு பெற்று சிறை சென்றவர். அதேபோல் சீதாவும் தனது சிறு வயதில் இருந்து இந்திய கம்யூனிஸ்ட் கட்சியில் தீவிரமாக பணியாற்றி வந்தார்.

எனவே சீதாவை அனந்தகிருஷ்ணன் திருமணம் செய்தார். திருமணத்திற்கு பிறகும் இருவரும் கம்யூனிஸ்ட் இயக்கத்தில் தீவிரமாக செயல்பட்டனர். அப்போது தான் நல்லக்கண்ணுவுடன் பழக்கம் ஏற்பட்டது. நல்லக்கண்ணு அடிக்கடி ஆனந்தகிருஷ்ணன் வீட்டிற்கு வந்து சென்றுள்ளார். இதனால் அவர் குடும்ப நண்பராகவே மாறிவிட்டார் அனந்தகிருஷ்ணன். கடந்த 2001ம் ஆண்டு மறைந்த நிலையில் சீதா மற்றும் அவரது குழந்தைகள் அடிக்கடி நல்லக்கண்ணுவை சந்தித்து வந்தனர். சமீபத்தில் கூட சீத்தாவின் மகள் ரேவதி சென்னை சென்று நல்லக்கண்ணுவிடம் நலம் விசாரித்து வந்தார்.

இது போன்ற சூழ்நிலையில் நல்லக்கண்ணு நேற்று உயிரிழந்த செய்தியை மகள் ரேவதி சீதாவிடம் கூறியபோது அவர் மிகவும் வருத்தம் அடைந்தார். நல்லக்கண்ணுவின் உருவப்படத்திற்கு சீதா மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். அப்போது தனது சிறு வயது அனுபவங்களை பகிர்ந்து கொண்டார். குறிப்பாக தன்னை நல்லகண்ணு தோளில் தூக்கி சுமந்ததாக கூறி, இப்படி அவசரப்பட்டு சென்றுவிட்டீர்களே என்று ஏக்கத்தோடு தனது வேதனையை வெளிப்படுத்தினார். தொடர்ந்து சீதாவின் குடும்பத்தினர் மற்றும் பொதுமக்கள் நல்லக்கண்ணு உருவப்படத்திற்கு மரியாதை செலுத்தினர்.

Tags : Vikepuram ,Nallakannu ,Urukkam ,Communist Party of India ,Seetha ,communist ,Nallakannu's… ,
× RELATED 2025-ஆம் ஆண்டிற்கான பெண் குழந்தைகள்...