அமமுக பொதுச்செயலாளர் டிடிவி.தினகரன் நெல்லையில் நேற்று அளித்த பேட்டி: தேசிய ஜனநாயக கூட்டணியில் தமிழகத்திற்கு தலைமையாக அதிமுக அமைந்துள்ளது. ராஜ்யசபா எம்பி சீட் நான் கேட்கவில்லை என்று பலமுறை கூறிவிட்டேன். வெகு விரைவில் கவுரவமான தொகுதிகளில் போட்டியிடுவோம். தகுதியான வேட்பாளர்களுக்கு சீட் பெற்று, வெற்றி பெற்று சட்டமன்றத்திற்குள் நுழைவோம்.
எந்த பிரச்னைகளும் இல்லாமல், மனக்கசப்புகள் எதுவும் இல்லாமல் எங்கள் அணியில் தொகுதிப் பங்கீடு சுமுகமாக நடைபெற்று நாங்கள் வெற்றியை நோக்கிச் செல்வோம். நடிகர் விஜய் அரசியலுக்கு வந்ததால் அதிமுக கூட்டணிக்குத் தான் பாதிப்பு என்று சும்மா வெளியில் மட்டுமே சொல்லிக் கொள்கிறார்கள். அதில் எந்த உண்மையும் இல்லை. எனக்கு தெரியும். இன்னும் சில விஷயங்களை நான் வெளிப்படையாக சொல்ல முடியாது. இவ்வாறு அவர் தெரிவித்தார்.
