தவெக கொடியுடன் தீ மிதித்த இளைஞர் விரட்டியடிப்பு

மயிலாடுதுறையில் பிரசித்தி பெற்ற தீப்பாய்ந்தாள் அம்மன் கோயிலில், 134ம் ஆண்டு தீமிதி திருவிழா நேற்றுமுன்தினம் இரவு நடந்தது. இதில் சிறியவர்கள் முதல் வயதானவர்கள் வரை 800க்கும் மேற்பட்டோர் தீ மிதித்து அவர்களது நேர்த்திக்கடன் செலுத்தினர்.

அப்போது தவெக தொண்டர் ஒருவர், கட்சி கொடியை கைகளில் பிடித்துக்கொண்டு தீ மிதித்து நேர்த்தி கடன் செலுத்தினார். இதனைப்பார்த்து கடும் ஆத்திரமடைந்த கோயில் நிர்வாகி, தவெக கட்சி கொடியை பிடுங்கி அவரை எச்சரித்ததோடு அங்கிருந்து விரட்டி அடித்தார். இதுதொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி பரபரப்பை ஏற்படுத்தியது.

Related Stories: