×

சிம்ஸ் பூங்காவில் நடவு செய்யப்பட்ட மலர் நாற்றுகளை பாதுகாக்கும் பணியில் ஊழியர்கள் தீவிரம்

குன்னூர் : குன்னூர் சிம்ஸ் பூங்காவில் நடவு செய்யப்பட்ட மலர் நாற்றுகளை பாதுகாக்கும் பணியில் பூங்கா ஊழியர்கள் தீவிரம் காட்டி வருகின்றனர் குன்​னூரில் உள்ள சிம்ஸ் பூங்கா நூற்றாண்டு பழமை வாய்ந்​தது. இங்​குள்ள அரிய வகை மரங்​கள் மற்​றும் மலர்ச் செடிகள் ஆகியவை சுற்​றுலா பயணி​களை வெகு​வாக கவர்ந்து வரு​கின்​றன.

ஆண்​டு​தோறும் ஏப்​ரல், மே மாதங்​களில் கோடை சீசன் நடைபெறு​வது வழக்​கம். மே மாத இறு​தி​யில் சிம்ஸ் பூங்​கா​வில் பழக் கண்காட்​சி​யும் நடத்​தப்​பட்டு வரு​கிறது. இந்த ஆண்டு மே மாதம் இறு​தி​யில் 66-வது பழக்கண்​காட்சி நடைபெற உள்​ளது.

இந்​நிலை​யில் குன்னூர் சிம்ஸ் பூங்​கா​வில் மலர் நாற்​றுகள் நடவு செய்யும் பணி கடந்த மாதம் 31ம் தேதி முதல் தொடங்​கியது. சால்​வி​யா, டேலி​யா, பால்​சம், மேரி கோல்​டு, ஆஸ்ட்​டர், பேன்​சி, பிளாக்ஸ் உட்​பட்ட 125-க்​கும் மேற்​பட்ட ரகங்​கள் நடவு செய்​யப்​பட்டன. அமெரிக்​கா, ஜப்பான், பிரான்​ஸ், ஜெர்​மனி, நெதர்​லாந்து உள்​ளிட்ட பல்​வேறு நாடுகளி​லிருந்​தும் கொண்டு வரப்​பட்ட நாற்றுக்​கள் நடவு செய்​யப்பட உள்​ன.

பூங்கா முழு​வதும் சுமார் 4 லட்​சத்து 50 ஆயிரம் மலர் நாற்​றுகள் நடவு செய்யப்பட உள்​ள நிலையில் தற்போது முதற்கட்டமாக நடவு செய்யப்பட்ட மலர் நாற்றுகளை பாதுகாக்கும் விதமாக பூங்கா ஊழியர்கள் தீவிரம் காட்டி வருகின்றனர். மேலும் இரவு நேரத்தில் பனிப்பொழிவு இல்லாமல் நாற்றுகள் மீது பைகளை விரித்தும், பகல் நேரங்களில் தினமும் நாற்றுகளுக்கு தண்ணீர் பாய்ச்சும் மலர் நாற்றுகளை பாதுகாக்கும் பணியில் முழு வீச்சில் ஈடுபட்டு வருகின்றனர்.

பாதுகாக்கப்பட்டு நாற்றுகளில் இருந்து வரும் பூக்கள் கோடை சீசனில் பூத்​துக்​குலுங்கும் என எதிர்​பார்க்​கப்​படு​கிறது. சென்ற ஆண்​டை​விட இந்த ஆண்டு சுற்​றுலா பயணி​களின் வருகை அதி​கரிக்​கும் என்று தோட்​டக்​கலைத் துறை அதி​காரி​கள் தெரி​வித்​துள்​ளனர்.

Tags : Sims Park ,Coonoor ,
× RELATED குறிஞ்சிப்பாடி வட்டாட்சியர்...