சபரிமலை தங்கம் திருட்டு வழக்கு விசாரணைக்கு ஆஜராக கூறி தந்திரிக்கு அமலாக்கத்துறை சம்மன்

திருவனந்தபுரம்: சபரிமலை தங்கம் திருட்டு வழக்கு தொடர்பாக விசாரணைக்கு ஆஜராகுமாறு கூறி தந்திரி மற்றும் முன்னாள் தேவசம் போர்டு தலைவர் வாசு ஆகியோருக்கு அமலாக்கத்துறை சம்மன் அனுப்பியுள்ளது. சபரிமலை தங்கம் திருட்டு தொடர்பாக கேரள சிறப்பு புலனாய்வுக் குழுவும், மத்திய அமலாக்கத் துறையும் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறது. இந்த வழக்கில் 12 பேர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.

இதில் சபரிமலை மூத்த தந்திரி கண்டரர் ராஜீவரர், முன்னாள் தேவசம் போர்டு தலைவர் வாசு, உண்ணிகிருஷ்ணன் போத்தி உள்பட 8 பேருக்கு ஜாமீன் கிடைத்துள்ளது. கடந்த சில தினங்களுக்கு முன்புதான் தந்திரியும், வாசுவும் சிறையிலிருந்து வெளியே வந்தனர். இந்நிலையில் விசாரணைக்கு ஆஜராகுமாறு கூறி இவர்கள் இருவருக்கும் அமலாக்கத்துறை சம்மன் அனுப்பியுள்ளது. மார்ச் முதல் வாரத்தில் கொச்சியிலுள்ள அமலாக்கத்துறை அலுவலகத்தில் விசாரணைக்கு ஆஜராகவேண்டும் என்று அந்த சம்மனில் குறிப்பிடப்பட்டுள்ளது.

Related Stories: