நாடு முழுவதும் உள்ள போலி பல்கலைக்கழகங்கள் பட்டியல் வெளியீடு: டெல்லி முதலிடம்

புதுடெல்லி: யுஜிசி தரப்பில் போலி பலகலைக்கழகம் குறித்த விவரங்கள் கொண்ட பட்டியல் நேற்று வெளியிடப்பட்டது. அதில், ‘பல்வேறு மாநிலங்களில் சட்டத்திற்கு புறம்பாக செயல்படும் போலி பலகலைக்கழங்கள் கண்டறியப்பட்டுள்ளது. குறிப்பாக தலைநகர் டெல்லியில் மட்டும் 12 போலி பல்கலைக்கழகங்கள் கண்டறியப்பட்டுள்ளது. இதன் மூலம் அதிக போலி பல்கலைக்கழகங்கள் இருக்கும் மாநிலங்களில் டெல்லி தான் முதலாவதாக இருக்கிறது.

இதையடுத்து உத்தரப்பிரதேசத்தில் நான்கும், ஆந்திரா, கர்நாடகா, கேரளா மகாராஷ்டிரா, புதுச்சேரி, மேற்குவங்கம் ஆகிய மாநிலங்களில் தலா இரண்டும், அதேப்போன்று அருணாச்சலப் பிரதேசம், அரியானா, ஜார்க்கண்ட் மற்றும் ராஜஸ்தானில் தலா ஒரு போலி பல்கலைக்கழகங்களும் செயல்பட்டு வந்தது கண்டறியப்பட்டுள்ளது.

குறிப்பாக யுஜிசி சட்டத்தின் படி, ஒன்றிய அல்லது மாநில அரசால் அங்கீகரிக்கப்பட்ட நிறுவனங்கள் மட்டுமே பல்கலைக்கழகம் என்ற பெயரைப் பயன்படுத்த முடியும். இந்தப் பட்டியலில் உள்ள நிறுவனங்களுக்குப் பட்டம் வழங்க எந்த அதிகாரமும் இல்லை. எனவே, மாணவர்கள் சேர்க்கை பெறுவதற்கு முன்பு அந்த நிறுவனத்தின் அங்கீகாரத்தை யுஜிசி இணையதளத்தில் அனைவரும் சரி பார்த்து கொள்ள வேண்டும்’ என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

Related Stories: