*சரி செய்ய கோரிக்கை
சேத்தியாத்தோப்பு : சேத்தியாத்தோப்பு அருகே பின்னலூர் பகுதியில் விகேடி உயர் மட்ட பாலம் அமைக்கப்பட்டு அதனை ஒட்டி உயர்மட்ட சாலையும் செல்கிறது.
பல கோடி ரூபாய் மதிப்பீட்டில் கட்டமைக்கப்பட்ட இந்த சாலை பணிகள் முடிவடைந்து கடந்தாண்டு காணொலி காட்சி மூலம் பிரதமர் மோடி திறந்து வைத்தார். அதன் பின்னர் பயன்பாட்டுக்காக இந்த சாலை திறந்து விடப்பட்டு பேருந்துகள், கனரக வாகனங்கள், கார்கள் உள்ளிட்ட வாகனங்கள் சென்று வருகிறது.
இந்நிலையில் பின்னலூர் பகுதியில் கட்டமைக்கப்பட்டுள்ள உயர் மட்ட சாலையின் கீழே வாலாஜா ஏரியின் உபரி நீர் தேங்கி நிற்கும் பகுதியில் சாலைக்காக அமைக்கப்பட்ட கருங்கல் பெயர்ந்து வருவதால் கன மழை காலங்களில் அதிகளவு சாலையில் சரி ஏற்பட வாய்ப்புகள் அதிகமாக உள்ளதாக சமூக ஆர்வலர்களும், வாகன ஓட்டிகளும் அச்சம் தெரிவித்துள்ளனர்.
சாலையின் இரு புறங்களிலும் பல இடங்களில் இதுபோன்று சேதம் ஏற்பட்டு வருவதாக தெரிவிக்கின்றனர். வாலாஜா ஏரியை ஒட்டிய பகுதி என்பதால் மழைக்காலங்களில் என்எல்சியின் உபரி நீரும், மழை நீரும் சேர்ந்து அதிக அளவு வடிகால் ஆகும் பகுதியாக இப்பகுதி உள்ளதால் பின்வரும் காலங்களில் சாலை சரிவு ஏற்பட வாய்ப்புகள் உள்ளதாக அப்பகுதி மக்கள் தெரிவித்துள்ளனர்.
எனவே மாவட்ட நிர்வாகம் சாலை சரிவு ஏற்பட்டுள்ள பகுதிகளை நேரடியாக ஆய்வு செய்து சீரமைப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என வலியுறுத்தியுள்ளனர்.
