சென்னை: இஸ்லாமியர்கள் ரம்ஜான் மாதத்தின் 30 நாட்களிலும் நோன்பிருப்பது வழக்கம். ஷவ்வால் மாதம் 29ம் நாளில் வானில் தோன்றும் பிறையை வைத்து ரம்ஜான் நோன்பு தொடங்கப்படும். அதன்படி நோன்பு தொடங்குவதற்கான பிறை தென்பட்டதால் இன்று முதல் ரம்ஜான் நோன்பு கடைபிடிக்கப்படும் என்று தமிழக அரசின் தலைமை ஹாஜி அறிவித்துள்ளார்.
இதுதொடர்பாக தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் தலைமை காஜி தாவூத் கைஸர் வெளியிட்ட மற்றொரு அறிவிப்பில், “ மயிலாடுதுறை மாவட்டம் திருக்களாச்சேரியில் பிறை தென்பட்டுள்ளதால் நாளை (இன்று) முதல் புனித ரமலான் நோன்பு ஆரம்பமாகிறது” என்று தெரிவித்துள்ளார்.
இன்று முதல் அனைத்து பள்ளிவாசல்களிலும் தராவீஹ் என்ற சிறப்பு தொழுகை நடைபெறும். நோன்பு இருக்கும் இஸ்லாமியர்களுக்கு ஷஹர் என்ற உணவு இலவசமாக வழங்க சென்னையில் 60க்கும் மேற்பட்ட இடங்களில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இவ்வாறு தெரிவித்துள்ளார்.
