1. சட்டமன்ற தேர்தலை தமிழக மக்கள் ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருக்கும் நேரத்தில் மாநிலங்களவை உறுப்பினர்களுக்கான தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. மாநிலங்களவை உறுப்பினராக இருக்கும் நீங்கள், தேர்தல் பிரசாரத்தில் எதற்கு அதிக முக்கியத்துவம் அளிக்கப்படும்? நாடாளுமன்றத்தில் நான் என்ன நிரூபித்துள்ளோன் என்பது திமுக தலைவருக்கு தெரியும். அவர் என்ன முடிவு எடுக்கிறாரோ அந்த முடிவுக்கு நாங்கள் கட்டுப்படுவோம். எனக்கு 4 வருடங்கள் வாய்ப்பு அளிக்கப்பட்டது.
என்னால் கழகத்திற்கு என்ன செய்ய முடியுமோ அதை செய்துள்ளேன். 4 வருடத்தில் ராஜ்யசபாவின் முதல் இடத்தை தக்கவைத்துள்ளேன். தமிழ்நாட்டில் நான்தான் டாப்பர். எனக்கு கொடுக்கப்பட்ட வேலையில் நான் முழுமையாக செய்துள்ளேன். திமுக தலைவருக்கு என்ன செய்ய வேண்டும் என்பது நன்றாக தெரியும். அதேபோல், தமிழ்நாடு தலைகுனியாது என்பதில் 14 சட்டமன்ற தொகுதிகள் கொடுக்கப்பட்டுள்ளது. தமிழ்நாடு முழுவதும் சென்று இந்த 5 ஆண்டு காலத்தில் என்ன செய்துள்ளோம் என்பதை எடுத்துரைக்க வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. பெரிய வாய்ப்பாக கருதி அந்த வேலையை செய்வேன்.
2. மாநில சுயாட்சி, மத்தியில் கூட்டாட்சி என்பது திமுகவின் கொள்கை. ஆனால், மாநிலத்தில் கூட்டணி ஆட்சிக்கு பல கட்சிகள் தயாராக இருக்கிறார்கள். இந்த நேரத்தில் என்ன மாதிரியான அணுகுமுறை திமுகவிற்கும், தமிழகத்திற்கும் சரியாக இருக்கும்? ஒவ்வொரு கட்சிக்கும் ஒவ்வொரு ஆசைகள் இருக்கும். அதற்குள் எப்போதும் போகமுடியாது. திமுகவின் கோட்பாடு அண்ணா காலத்தில் இருந்து இன்று வரை மாநில சுயாட்சிதான்.
இதை ஆணித்தரமாக திமுக தலைவர் பேசி வருகிறார். இதுதான் திமுகவின் நிலைப்பாடு. மாநில சுயாட்சியை அண்ணா, கலைஞர் ஏன் கொண்டு வந்தார்கள் என்றால், மாநிலத்தில் உள்ளவர்களுக்கு மாநிலத்தின் நிலை என்ன என்பது பற்றி ஒரு புரிதல் இருக்கும். கூட்டணிக்காக கட்சியின் கொள்கையை விட்டு கொடுக்க முடியாது. திமுக என்றால் அதற்கு ஐம்பெரும் கொள்கைகள் உள்ளது. கொள்கைகளை விட்டு மாறிவிட முடியாது.
3. இந்த தேர்தல் களத்தில் திமுகவின் பலம், பலவீனம் என்னவாக இருக்கும்?
பலம் என்றால் மகளிர் உரிமை தொகை திட்டம், உங்களுடன் ஸ்டாலின் உள்ளிட்ட பல நலத்திட்டங்கள் மாணவர்கள், பெண்களுக்கு வழங்கப்பட்டுள்ளது. பூஜ்ஜியத்தில் இருந்து தமிழ்நாட்டின் பொருளாதாரத்தை இரண்டு இலக்கத்தில் கொண்டு வந்து நிறுத்தியுள்ளோம்.
இந்தியாவில் உள்ள மற்ற மாநிலங்களை ஒப்பிடும்போது எல்லா வகையிலும் முதல்மாநிலமாக உள்ளது. பெண்கள் வேலைவாய்ப்பு, தொழில் என எல்லாத்துறையிலும் முதல் மாநிலமாக உள்ளதற்கு திமுகவின் ஆட்சி தான் பொறுப்பு. பலவீனம் என்பது இந்த 5 ஆண்டு ஆட்சியில் எந்த வகையான சறுக்கலும் கிடையாது.
4. தேர்தலையே சந்திக்காமல் அதிக சதவீதம் ஓட்டு இருக்கு என்று தவெக தலைவர் சொல்கிறார். அவரின் கூட்டத்திற்கு கூட்டம் வருகிறது. திமுகவிற்கும், தவெகாவிற்கும் தான் போட்டியே இருக்கு என்று விஜய் சொல்கிறார். இது திமுகவிற்கு பாதகமாக இருக்குமா? ஒருவர் கட்சி ஆரம்பிக்கும் போது ஆசையுடன் பேசுவார்கள்.
அது அவரவர் தன்னம்பிக்கையை சார்ந்தது. திமுகவிற்கு அதிமுகவிற்கும் தான் போட்டி என்று சொல்லணும்தான் நான் ஆசைப்படுகிறேன். ஆனால், இன்றைய களநிலவரம் அவ்வாறு இல்லை. தமிழ்நாட்டின் நலனுக்கும், டெல்லியினுடைய வஞ்சகத்திற்குமான போட்டிதான் இங்கு நடைபெற்று கொண்டிருக்கிறது. இதில் என்ன பரிதாபமான விஷயம் என்றால் டெல்லியின் வஞ்சகத்தில் அதிமுக சிக்கியுள்ளது.
