அங்கன்வாடி ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்

கரூர், பிப். 18: பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு மாநில அங்கன்வாடி ஊழியர்கள் மற்றும் உதவியாளர்கள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டடனர். குறைந்தபட்ச ஒய்வூதியம் ரூ.6750 வழங்க வேண்டும், மற்ற பணப்பலன்கள் வழங்க வேண்டும் என்பன போன்ற பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு மாநில அங்கன்வாடி ஊழியர்கள் மற்றும் உதவியாளர்கள் சங்கத்தின் (தமிழ்ச்செல்வி குரூப்) மாவட்ட செயலாளர் பத்மாவதி தலைமையில் ஏராளமானோர் கரூர் கலெக்டர் அலுவலகம் முன்பு ஒன்று திரண்டு கடந்த சில தினங்களாக சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனைத தொடர்ந்து, இதே கோரிக்கைகளை வலியுறுத்தி கரூர் கலெக்டர் அலுவலகம் அருகே 100க்கும் மேற்பட்டோர் நேற்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

 

Related Stories: