லாலாப்பேட்டை பகுதிகளில் கஞ்சா விற்பனை செய்த 3 பேர் கைது

லாலாப்பேட்டை, பிப்.16: லாலாபேட்டை பகுதிகளில் கஞ்சா விற்பனைக்காக வைத்திருந்த 3 பேரை போலீசார் கைது செய்தனர். கரூர் மாவட்டம் லாலாபேட்டை காவல் நிலைய பகுதிகளில் கஞ்சா விற்பனை நடைபெற்று வருவதாக போலீசருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. லாலாபேட்டை சரஸ்வதி வித்யாலயா பள்ளி அருகே கள்ளப்பள்ளி செல்லும் சாலைப்பகுதியில் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர்.

சந்தேகத்திற்கு இடமாக நின்று கொண்டிருந்த மேட்டு மகாதானபுரத்தைச் சேர்ந்த சக்கரவர்த்தி (19). குணா (22). ஆகிய இருவரையும் மடக்கிப்பிடித்தனர். அவர்களிடமிருந்து 200 கிராம் கஞ்சா பறிமுதல் செய்தனர். இருவரையும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். அதேபோல் கம்மநல்லூர் காவிரி ஆற்று படுகை அருகே அதே ஊரைச் சேர்ந்த இளையராஜா என்பவரிடம் இருந்து 10 கிராம் கஞ்சாவினை பறிமுதல் செய்து அவரையும் கைது செய்தனர். போலீசார் 3 பேரையும் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

 

Related Stories: