- முதல் அமைச்சர்
- எம்.கே. ஸ்டாலின்
- விதுகல்
- சென்னை
- விடுதலை-ஒருங்கிணைந்த சேவை மையங்கள்'
- அரியலூர்
- கோயம்புத்தூர்
- கடலூர்
- ஈரோடு
- கள்ளக்குறிச்சி
- கிருஷ்ணகிரி
- மயிலாடுதுறை
- நாகப்பட்டினம்
- ராமநாதபுரம்
- சேலம்
சென்னை: மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ.14.57 கோடி செலவில் சென்னை உள்பட 20 மாவட்டங்களில் 105 ‘விழுதுகள் – ஒருங்கிணைந்த சேவை மையங்களை’ முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார். சென்னை, அரியலூர், கோயம்புத்தூர், கடலூர், ஈரோடு, கள்ளக்குறிச்சி, கிருஷ்ணகிரி, மயிலாடுதுறை, நாகப்பட்டினம், ராமநாதபுரம், சேலம், தஞ்சாவூர், திருப்பத்தூர், திருவள்ளூர், தூத்துக்குடி, விருதுநகர், விழுப்புரம், நீலகிரி, திருவாரூர், புதுக்கோட்டை ஆகிய 20 மாவட்டங்களில் 105 ‘விழுதுகள் – ஒருங்கிணைந்த சேவை மையங்கள்’ ரூ.14 கோடியே 57 லட்சம் செலவில் அமைக்கப்பட்டுள்ளது. இதை முதல்வர் நேற்று திறந்து வைத்தார்.
இந்த மையங்களில், மாற்றுத்திறனாளிகளின் நாள்பட்ட மறுவாழ்வு தேவைகளை பூர்த்தி செய்ய, ஒரே இடத்தில் சிறப்பு கல்வி, கண்பார்வை அளவியல் சேவை, கேட்டல் மற்றும் பேச்சுப் பயிற்சி, இயன்முறை சிகிச்சை, செயல்முறை சிகிச்சை, உளவியல் சிகிச்சை ஆகிய 6 சேவைகள் வழங்கப்படுகின்றன. இம்மையங்கள் ஒன்றிய அரசால் வரையறுக்கப்பட்ட Harmonized Guidelines 2021-படி தரமான கட்டிட வடிவமைப்புடன், மாற்றுத்திறனாளிகள் பயன்பெறும் வகையில் அனைத்து அணுகல் வசதிகளுடனும் அமைக்கப்பட்டுள்ளன. இந்த நிகழ்ச்சியில் சமூகநலம் – மகளிர் உரிமைத்துறை அமைச்சர் கீதா ஜீவன், தலைமை செயலாளர் முருகானந்தம், மாற்றுத்திறனாளிகள் நலத்துறை செயலாளர் மதுமதி, மாற்றுத்திறனாளிகள் நல ஆணையர் லட்சுமி மற்றும் அரசு உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
