×

மக்கள் நல்வாழ்வுத் துறை சார்பில் ரூ.317.73 கோடி செலவில் கட்டப்பட்டுள்ள மருத்துவக் கட்டடங்களை திறந்து வைத்தார் முதல்வர் மு.க.ஸ்டாலின்

சென்னை: தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் 16.2.2026 அன்று தலைமைச் செயலகத்தில், மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை சார்பில் 100 கோடி ரூபாய் செலவில் தரம் உயர்த்தப்பட்ட ஓசூர் அரசு மாவட்ட தலைமை மருத்துவமனை, சென்னை, ராஜீவ்காந்தி அரசு பொது மருத்துவமனை வளாகத்தில் 65 கோடி ரூபாய் செலவில் கட்டப்பட்டுள்ள நரம்பியல் பிரிவுக் கட்டடம், தமிழ்நாடு அரசு பல் மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனையில் 64 கோடியே 9 இலட்சம் ரூபாய் செலவில் கட்டப்பட்டுள்ள கூடுதல் கட்டடங்கள், சென்னை, கீழ்பாக்கம் அரசு மனநல மருத்துவமனையில் 40 கோடி ரூபாய் செலவில் கட்டப்பட்டுள்ள ஒப்புயர்வு மையக் கட்டடம், சென்னை, இராயபுரம், அரசு RSRM மகப்பேறு மருத்துவமனையில் 31 கோடியே 74 இலட்சம் ரூபாய் செலவில் கட்டப்பட்டுள்ள ஒருங்கிணைந்த அவசரகால மற்றும் பச்சிளம் குழந்தை பராமரிப்பு மையத்திற்கான கூடுதல் கட்டடம் மற்றும் இரத்த வங்கி நவீன ரத்த கூறு பிரிப்பு அலகு, திருக்குவளை அரசு மருத்துவமனையில் 3 கோடியே 50 இலட்சம் ரூபாய் செலவில் கட்டப்பட்டுள்ள தாய்சேய் நலக் கட்டடம், வேதாரண்யம் அரசு மாவட்ட தலைமை மருத்துவமனையில் 13 கோடியே 40 இலட்சம் ரூபாய் செலவில் கட்டப்பட்டுள்ள கூடுதல் கட்டடம் ஆகியவற்றை திறந்து வைத்தார்.

தரம் உயர்த்தப்பட்ட ஒசூர் அரசு மாவட்ட தலைமை மருத்துவமனை திறந்துவைத்தல்
கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் அரசு மருத்துவமனை தற்போது 275 படுக்கைகள் வசதிகளுடன் செயல்பட்டு வருகிறது. இம்மருத்துவமனையை மாவட்ட தலைமை மருத்துவமனையாக தரம் உயர்த்தி 100 கோடி ரூபாய் செலவில் தரை மற்றும் ஆறு தளங்களுடன் கட்டப்பட்டுள்ள புதிய மருத்துவமனைக் கட்டடத்தை தமிழ்நாடு முதலமைச்சர் திறந்து வைத்தார்.

இக்கட்டடத்தின் தரைத்தளத்தில் வெளிநோயாளிகள் பிரிவு, சிறிய அறுவை சிகிச்சை அறை, மருந்தகம், சி.டிஸ்கேன், எம்ஆர்ஐ, எக்ஸ்ரே அல்ட்ரா சவுண்ட் ஸ்கேன், TAEI, மேமோகிராம், முதல் தளத்தில் ஆய்வகம், இரத்த வங்கி, அவசர அறுவை சிகிச்சை அறை, மருந்தகம், இரண்டாவது தளத்தில் செவிலியர்கள் அறை, மருத்துவர் அறை, அறுவை சிகிச்சை பின் கவனிப்பு பிரிவு, அறுவை சிகிச்சை பின் கவனிப்பு பிரிவு பெண்கள், கிமோதெரப்பி பிரிவு, இயன்முறை சிகிச்சை பிரிவு, முதியோர்களாக பிரிவு, மூன்றாவது தளத்தில் HDU பிரிவு, கட்டண பிரிவு, தனிமைப்படுத்தப்பட்ட பிரிவு, நான்காவது தளத்தில் HDU வார்டு, தனிமைப்படுத்தப்பட்ட பிரிவு, கட்டண பிரிவு, அறுவை சிகிச்சை பின் கவனிப்பு பிரிவு ஆண்கள் ஐந்தாவது தளத்தில் அறுவை அரங்கம், மருத்துவர் அறை, அறுவை சிகிச்சைப்பின் கவனிப்பு பிரிவு பெண்கள், ஆறாவது தளத்தில் முதன்மை மருத்துவர்களாக அறை, கூட்ட அரங்கு, தீவிர சிகிச்சை பிரிவு, தனிமைப்படுத்தப்பட்ட பிரிவு ஆகிய வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளதால் 225 படுக்கைகள் அதிகரித்து, மொத்தம் 500 படுக்கைகள் வசதிகள் கொண்ட ஓசூர் அரசு மாவட்ட தலைமை மருத்துவமனையாக தரம் உயர்த்தப்பட்டுள்ளது.

சென்னை, ராஜீவ்காந்தி அரசு பொது மருத்துமனை வளாகத்தில் கட்டப்பட்டுள்ள நரம்பியல் பிரிவுக் கட்டடத்தை திறந்து வைத்தல்
மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறையின் 2022-23 ஆம் ஆண்டிற்கான மானியக் கோரிக்கையில், சென்னை ராஜீவ்காந்தி அரசு பொது மருத்துவமனையில், பொதுமக்கள் சிறந்த மருத்துவ சேவையை பெறுவதற்கான நவீன உபகரணங்களுடன் கூடிய புதிய நரம்பியல் பிரிவு கட்டடம் கட்டப்படும் என்று அறிவிக்கப்பட்டது. அதன்படி, சென்னை, ராஜீவ்காந்தி அரசு பொது மருத்துவமனை வளாகத்தில் மொத்தம் 1,12,247 சதுர அடி பரப்பளவில் அடித்தளம், தரை தளம் மற்றும் நான்கு தளங்களுடன் 220 படுக்கை வசதிகளுடன், 65 கோடி ரூபாய் செலவில் உலகத்தரத்தில் கட்டப்பட்டுள்ள நரம்பியல் பிரிவுக் கட்டடத்தை தமிழ்நாடு முதலமைச்சர் திறந்து வைத்தார்.

இக்கட்டடத்தின் அடித்தளத்தில் வாகன நிறுத்துமிடம், தரை தளத்தில் நரம்பியல் மருத்துவ புற நோயாளிகள் பிரிவு, நரம்பியல் அறுவை சிகிச்சை புற மருத்துவ பயனாளர்கள் பிரிவு, கதிரியக்கவியல் பிரிவு, இயன் மருத்துவப் பிரிவு, முதல் மற்றும் இரண்டாம் தளங்களில் பெண்கள் மற்றும் ஆண்களுக்கான பொது வார்டுகள், மூன்றாம் தளத்தில் தீவிர சிகிச்சை பிரிவுகள், நான்காம் தளத்தில் நவீன வசதிகள் கொண்ட அறுவை சிகிச்சை அரங்கங்கள். அறுவை சிகிச்சைக்கு முந்தைய அறை. மீட்பு அறை, மாற்றுத்திறனாளிகளுக்கான கழிப்பிடங்கள். பொது கழிப்பிடங்கள். மின்தூக்கிகள், சாய்வுதளம் போன்ற பல்வேறு கட்டப்பட்டுள்ளது. வசதிகளுடன்

தமிழ்நாடு அரசு பல் மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனையில் கட்டப்பட்டுள்ள கூடுதல் கட்டடத்தை திறந்து வைத்தல்
சென்னை, தமிழ்நாடு அரசு பல் மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனையின் இரண்டாவது தளத்திற்கு மேல் 64 கோடியே 9 இலட்சம் ரூபாய் செலவில் கட்டப்பட்டுள்ள மூன்று முதல் 6 தளங்கள் வரையிலான கூடுதல் கட்டடத்தை தமிழ்நாடு முதலமைச்சர் திறந்து வைத்தார்.
இக்கூடுதல் கட்டடத்தின் மூன்றாம் தளத்தில் பல் பாதுகாப்பு துறை மற்றும் சமுதாய பல் பாதுகாப்பு துறை மற்றும் கருத்தரங்கு கூடம், நான்காவது தளத்தில் பல் சீரமைப்பு துறை, ஈறு நோய் சிகிச்சை துறை மற்றும் கருத்தரங்கு கூடம், ஐந்தாம் தளத்தில் விரிவுரை கூடம் 1 & 2, சேமிப்பு அறை, பணியாளர் செவிலியர் அறை, செவிலியர் கண்காணிப்பாளர் அறை, உணவு அருந்தும் இடம், பெட்டக அறை, ஆண்கள் மற்றும் பெண்கள் பொதுக் கூடம், உபகரண அறை, பேராசிரியர்கள் அறை, துணை மருத்துவ பணியாளர்கள் அறை, ஆறாம் தளத்தில் கலந்தாய்வு அரங்கம், பிரதான கலையரங்கம், விரிவுரை கூடம், கட்டுபாட்டு அறை, தேர்வு அறை, பொருள் வைப்பு அறை, சேமிப்பு அறை, ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அறை, திறன் ஆய்வகம் ஆகியவை கட்டப்பட்டுள்ளன. இந்த பல் மருத்துவமனையில் 1000 புறநோயாளிகள் தற்பொழுது பயனைனடந்து வருகின்றனர். இக்கூடுதல் கட்டடம் மூலம் 1500 புறநோயாளிகள் பயனடைவர் என்பது குறிப்பிடத்தக்கது.

சென்னை, கீழ்பாக்கம் அரசு மனநல மருத்துவமனையில் கட்டப்பட்டுள்ள ஒப்புயர்வு மையம் திறந்து வைத்தல்
தமிழ்நாடு மனநல மற்றும் நரம்பியல் நிறுவனம் சார்பில் சென்னை, கீழ்பாக்கம் அரசு மனநல மருத்துவமனையில் தரை மற்றும் ஆறு தளங்களுடன், 40 கோடி ரூபாய் செலவில் கட்டப்பட்டுள்ள ஒப்புயர்வு மையக் கட்டடத்தை தமிழ்நாடு முதலமைச்சர் திறந்து வைத்தார்.

இக்கட்டடத்தின் தரைதளத்தில் மனநல மருத்துவ புதிய புறப் பயனாளர்கள் பிரிவு, Ultra Sound பரிசோதனை அறை, எக்ஸ்ரே அறை, சிடி ஸ்கேன் பிரிவு, முதல் தளத்தில் குழந்தைகள் மற்றும் வளரிளம் வயதினர் மனநல புறப்பயனாளர் பிரிவு, முதியோர் மனநல புறப்பயனாளர் பிரிவு. நரம்பியல் உளவியல் பரிசோதனை அறை, தீவிர மனநல சிகிச்சை பிரிவு, இரண்டாம் தளத்தில் முதியோர் மனநல உட்பயனாளர் பிரிவு. குழந்தைகள் வழிகாட்டு மையம், மூன்றாம் தளத்தில் குழந்தைகள் மற்றும் வளரிளம் வயதினர் மனநலப் பிரிவு, தாய்சேய் பிரிவு, நான்காவது தளத்தில் நரம்பியல் மனநலப் பிரிவு, போதைநீக்கு உட்பயனாளர் பிரிவு, ஐந்தாவது தளத்தில் மனநலப் பிரிவுகள். ஆறாம் தளத்தில் மின்அதிர்வு சிகிச்சை பிரிவு. உளவியல் சிகிச்சை, பன்நோக்கு செயல்வழி சிகிச்சை பிரிவு, யோகா மற்றும் இயற்கை சிகிச்சை பிரிவு உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளுடன் கட்டப்பட்டுள்ளன.

சென்னை, இராயபுரம் அரசு RSRM மகப்பேறு மருத்துவமனையில் கூடுதல் கட்டடங்களை திறந்து வைத்தல்
சென்னை, இராயபுரம், அரசு RSRM மகப்பேறு மருத்துவமனை கடந்த 145 ஆண்டுகளாக செயல்பட்டு வரும் ஒரு பாரம்பரிய மகப்பேறு மருத்துவ நிறுவனம் ஆகும். இந்த மருத்துவமனையில் மாதத்திற்கு சராசரியாக 800-900 பிரசவங்கள் நடைபெறுகின்றன முழுமையாக வசதிகள் செய்யப்பட்ட பச்சிளங்குழந்தை தீவிர சிகிச்சைப் பிரிவு (NICU) செயல்பட்டு, நோயுற்ற மற்றும் காலத்திற்கு முன் பிறந்த பச்சிளங்குழந்தைகளின் உயிரைக் காப்பாற்றுவதில் முக்கிய பங்கு வகிக்கிறது.

இம்மருத்துவமனையின் ஒருங்கிணைந்த அவசரகால மற்றும் பச்சிளம் குழந்தை பராமரிப்பு மையத்திற்கு (CEMONC) கூடுதல் நான்கு தளங்கள் (3 முதல் 6 தளங்கள்) மற்றும் புதிய இணைப்பு கட்டடம் (தரை மற்றும் இரண்டு தளங்கள்), என மொத்தம் 30 கோடி ரூபாய் செலவில் கட்டப்பட்டுள்ள மருத்துவக் கட்டடங்கள் மற்றும் 1 கோடியே 74 இலட்சம் ரூபாய் செலவில் இரத்த வங்கி நவீன ரத்த கூறு பிரிப்பு அலகு ஆகியவற்றை மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் திறந்து வைத்தார்.

ஒருங்கிணைந்த அவசரகால மற்றும் பச்சிளம் குழந்தை பராமரிப்பு மையத்தில் புதிதாக கட்டப்பட்டுள்ள மூன்று மற்றும் நான்காம் தளங்களில் பிரசவ காலத்திற்கு முன் பிறந்த பச்சிளங் குழந்தை சிகிச்சைப் பிரிவு, தாய்சேய் பராமரிப்பு அறை, ஐந்தாம் தளத்தில் கர்ப்பிணி பெண்கள் அறை, ஆறாம் தளத்தில் கலந்தாய்வு அரங்கம் மற்றும் கருத்தரங்கம் ஆகியவை கட்டப்பட்டுள்ளன. புதிய இணைப்பு கட்டடத்தின் தரைத் தளத்தில் வாகன நிறுத்துமிடம், முதல் தளத்தில் 10 சிறப்பு சிகிச்சை அறைகள், இரண்டாம் தளத்தில் 10 சிறப்பு சிகிச்சை அறைகள் ஆகியவை கட்டப்பட்டுள்ளன.

திருக்குவளை அரசு மருத்துவமனையில் கட்டப்பட்டுள்ள கூடுதல் கட்டடம் திறந்து வைத்தல்
நாகப்பட்டினம் மாவட்டம். திருக்குவளை அரசு மருத்துவமனை தற்போது 20 படுக்கைகள் வசதிகளுடன் செயல்பட்டு வருகிறது. திருக்குவளை அரசு மருத்துவமனையில் புதியதாக தரை மற்றும் முதல் தளத்துடன் 3.50 கோடி ரூபாய் செலவில் கட்டப்பட்டுள்ள தாய்சேய் நலக் கட்டடத்தை தமிழ்நாடு முதலமைச்சர் திறந்து வைத்தார்.

இக்கட்டடத்தின் தரைத்தளத்தில் புறநோயாளிகள் பதிவு பிரிவு. மருந்தகம், ஆண் (ம) பெண் வெளிநோயாளிகள் பிரிவு, தொற்றாநோய் பிரிவு, இசிஜி அறை, அவசர சிகிச்சை பிரிவு வெளிநோயாளிகள் காத்திருப்பு பகுதி. முதல் தளத்தில் அலுவலகம், முதன்மை மருத்துவ அலுவலர் அறை, முதலமைச்சரின் காப்பீட்டு திட்டம் ஆகிய வசதிகளால் 20 படுக்கைகள் அதிகரிக்கப்பட்டு, தற்போது 40 படுக்கைகள் வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளது.

வேதாரண்யம் அரசு மாவட்ட தலைமை மருத்துவமனையில் கட்டப்பட்டுள்ள கூடுதல் கட்டடத்தை திறந்து வைத்தல்
நாகப்பட்டினம் மாவட்டம், வேதாரண்யம் அரசு மாவட்ட தலைமை மருத்துவமனை தற்போது 83 படுக்கைகள் வசதிகளுடன் செயல்பட்டு வருகிறது. வேதாரண்யம் அரசு மாவட்ட தலைமை மருத்துவமனைக்கு 13.40 கோடி ரூபாய் செலவில் தரை மற்றும் நான்கு தளங்களுடன் கட்டப்பட்டுள்ள கூடுதல் கட்டடத்தை தமிழ்நாடு முதலமைச்சர் திறந்து வைத்தார்.

இக்கட்டடத்தின் தரைத்தளத்தில் விபத்து மற்றும் அவசர சிகிச்சை பிரிவு, சிறிய அறுவை சிகிச்சை அரங்கு, எக்ஸ்ரே, சி.டி.ஸ்கேன், முதல் தளத்தில் ஆண்கள் (ம) பெண்கள் மருத்துவ பரிசோதனை அறை,இரண்டாவது தளத்தில் ஆண்கள் (ம) பெண்கள் அறுவை சிகிச்சை பிரிவு மூன்றாவது தளத்தில் ஆண்கள் மற்றும் பெண்கள் எலும்பு முறிவு சிகிச்சை பிரிவு, முதலமைச்சரின் காப்பீட்டு பிரிவு, தீக்காய சிகிச்சை பிரிவு. நான்காவது தளத்தில் அறுவை சிகிச்சைக்கு பின் கவனிப்பு பிரிவு. தீவிர சிகிச்சை பிரிவு, அறுவை சிகிச்சை அரங்கம், ஆகிய வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளதால் 150 படுக்கைகள் அதிகரித்து மொத்தம் 223 படுக்கைகள் வசதிகள் கொண்டதாக வேதாரண்யம் அரசு மாவட்ட தலைமை மருத்துவமனை செயல்படும்.

இந்த நிகழ்ச்சியில், பொதுப்பணித் துறை அமைச்சர் எ.வ வேலு, மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், இந்து சமய அறநிலையத் துறை அமைச்சர் பி.கே. சேகர்பாபு, தலைமைச் செயலாளர் நா. முருகானந்தம், இ.ஆ.ப., மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை அரசு கூடுதல் தலைமைச் செயலாளர் முனைவர் ப. செந்தில்குமார். இ.ஆ.ப., தேசிய நலவாழ்வு குழும இயக்குநர் அருண் தம்புராஜ், இ.ஆ.ப., தமிழ்நாடு சுகாதார திட்ட இயக்குநர் மருத்துவர் எஸ்.வினீத், இ.ஆ.ப., மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை கூடுதல் செயலாளர் டாக்டர் எஸ். உமா. இ.ஆ.ப., மருத்துவக் கல்வி மற்றும் ஆராய்ச்சி இயக்குநர் மரு. ஆர். சுகந்தி ராஜகுமாரி மற்றும் அரசு உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

Tags : Chief Minister ,Public Welfare Department ,K. Stalin ,Chennai ,Chief Minister of ,Tamil Nadu ,Department of Medicine and People's Welfare ,Hosur Government District Chief Hospital ,Rajiv Gandhi Government Public ,
× RELATED ஒன்றிய அரசின் வரி விகித மாற்றங்களால்...