சட்டமன்ற தேர்தல் விரைவில் நடக்கவுள்ளது. இதற்காக விரைவில் தேர்தல் கணக்கு பிரிவு துவக்கப்படவுள்ளது. வேட்பாளர்கள் 7 நாளுக்கு ஒரு முறை செலவு கணக்கு சமர்ப்பிக்க தேர்தல் கமிஷன் உத்தரவிட்டுள்ளது. தேர்தல் கமிஷன் தேர்தல் செலவு கணக்கு பிரிவிற்கு அனுப்பியுள்ள உத்தரவில், ‘‘ வேட்பாளர் பிரசாரத்தில் ஈடுபட்டிருக்கும் போது உடன் வரும் கட்சியினர் சாப்பாடு செலவு, வாகன செலவு அனைத்தும் வேட்பாளர் கணக்கில் தான் சேர்க்கவேண்டும். அவர்கள் மறுத்தாலும் வீடியோ ஆதாரத்தை பார்த்து செலவு விவரங்களை எழுதி வைக்கவேண்டும்.
பிரச்சாரம் துவக்கம் முதல் முடியும் வரை செலவு விவரங்களை எழுதி வைத்து கணக்கு காட்டவேண்டும். வேட்பாளர்களை முழுமையாக வீடியோவில் கண்காணிக்கவேண்டும். வேட்பாளர்கள் தொடர்பான ெசய்திகள், பிரசாரம், பேஸ்புக், யூடியூப் ஓட்டு கேட்பும் செலவு கணக்கில் வரவேண்டும்’’ என தெரிவிக்கப்பட்டுள்ளது. செலவு கணக்கு வரவில்லை என காத்திருக்க வேண்டாம். தேர்தல் பிரிவினரே பல செலவுக்கு ‘பில்’ போட்டு வைத்து தயாராக வைத்திருக்க வேண்டும். செலவுகளை கவனிக்காமல் விட்டு விடக்கூடாது என கறாராக தெரிவிக்கப்பட்டுள்ளது.
