கோவிலஞ்சேரி பகுதியில் ஆக்கிரமிப்புகள் அகற்றம்

தாம்பரம், பிப்.14: தாம்பரம் அருகே கோவிலஞ்சேரியில் நீதிமன்ற உத்தரவின்படி ஆக்கிரமிப்பு வீடுகள் இடித்து அகற்றப்பட்டது. தாம்பரம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட கோவிலஞ்சேரி, ராகேஷ் நகர் பகுதியில் உள்ள பட்டா நிலத்தின் அருகே இருக்கும் குளம் புறம்போக்கு இடத்தில் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டு வீடுகள் கட்டப்பட்டுள்ளது. இதுகுறித்து தனிநபர் ஒருவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். வழக்கை விசாரித்த நீதிமன்றம் ஆக்கிரமிப்பு வீடுகளை இடித்து அகற்ற உத்தரவிட்டது. இதனைத்தொடர்ந்து தாம்பரம் வருவாய்த் துறையினர், சேலையூர் காவல் நிலைய போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று பொக்லைன் இயந்திரங்கள் உதவியுடன் ஆக்கிரமித்து கட்டப்பட்ட 9 வீடுகளை இடித்து அகற்றினர். முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அப்பகுதியில் ஏராளமான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்ததால் அப்பகுதி முழுவதும் பரபரப்பாக காணப்பட்டது.

Related Stories: