வி.எஸ் அச்சுதானந்தனுக்கு அறிவிக்கப்பட்ட பத்ம விபூஷண் விருதை வாங்க மாட்டோம்: மகன் அருண்குமார் முகநூலில் தகவல்

திருவனந்தபுரம்: கேரள முன்னாள் முதல்வர் மறைந்த வி.எஸ். அச்சுதானந்தனுக்கு சமீபத்தில் ஒன்றிய அரசு சார்பில் பத்ம விபூஷண் விருது அறிவிக்கப்பட்டது. இந்த விருதை மகிழ்ச்சியுடன் ஏற்றுக்கொள்வதாக அவரது மகன் அருண்குமார் கூறியிருந்தார். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் அகில இந்திய பொதுச் செயலாளர் எம்.ஏ. பேபி கூறும்போது, ‘வி.எஸ். அச்சுதானந்தன் உயிருடன் இருந்தால் அந்த விருதை ஏற்றுக் கொள்ள மாட்டார்.

விருதை ஏற்றுக் கொள்ளக் கூடாது என்பதுதான் கட்சியின் விருப்பமாகும்’ என்றார். இந்நிலையில் அருண்குமார் தன்னுடைய முகநூலில்,’ஒன்றிய அரசின் மிக உயரிய விருதுகளில் ஒன்றான பத்ம விபூஷண் என்னுடைய தந்தைக்கு வழங்கத் தீர்மானித்திருப்பதாக கூறி உள்துறை அமைச்சகத்திடம் இருந்து முறையான அறிவிப்பு வந்துள்ளது.

அச்சுதானந்தனுக்கு மக்கள் மனதில் கிடைத்த இடம்தான் எந்த விருதையும் விட பெரிதாகும். இந்த உயரிய விருது அவருடைய பொதுவாழ்க்கைக்கு கிடைத்த அங்கீகாரமாக கருதுகிறோம். ஆனாலும் இத்தகைய விருதுகளை பெறுவதற்கு என்னுடைய தந்தை அங்கம் வகித்த கட்சிக்கு சில கோட்பாடுகள் உள்ளன. அதை நாங்களும் ஏற்றுக்கொள்கிறோம்’ என்று குறிப்பிட்டுள்ளார்.

Related Stories: