டெல்லி: 2026 ஆம் ஆண்டில் ஜனவரி 1 முதல் 15 வரை, மொத்தம் 807 பேர் காணாமல் போயுள்ளனர். சராசரியாக ஒவ்வொரு நாளும் 54 பேர் காணாமல் போகின்றனர். இவர்களில் 509 பேர் பெண்கள் மற்றும் சிறுமிகள், 298 பேர் ஆண்கள் ஆகும். இதில் 191 பேர் சிறார்களாகவும், 616 பெரியவர்கள் காணாமல் போனதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. காணாமல் போனவர்களில் 235 பேரை போலீசார் கண்டுபிடித்துள்ள நிலையில், சுமார் 572 பேர் இன்னும் கண்டுபிடிக்கப்படவில்லை.
ஜனவரி 1 முதல் 15 வரை ஒவ்வொரு நாளும் சராசரியாக 13 குழந்தைகள் காணாமல் போனதாக தரவுகள் தெரிவிக்கின்றன, மொத்தம் காணாமல் போன 191 சிறார்களில் 146 பேர் பெண் குழந்தைகளாகும். காணாமல் போன சிறார்களில் 169 பேர் இளம் வயதினர். இவர்களில் 138 பேர் இளம்வயது பெண்கள், 31 பேர் சிறுவர்கள். இவர்களில் 29 சிறுமிகளையும், 19 சிறுவர்களையும் போலீசார் கண்டுபிடித்தனர், ஆனால் சுமார் 71 சதவீத இளம் பருவத்தினர் கண்டுபிடிக்கப்படவில்லை என்று தரவுகள் தெரிவிக்கின்றன.
8 முதல் 12 வயதுக்குட்பட்ட 13 குழந்தைகள் காணாமல் போயினர், எட்டு சிறுவர்கள் மற்றும் ஐந்து சிறுமிகள், மூன்று சிறுவர்கள் மட்டுமே கண்டுபிடிக்கப்பட்டனர். எட்டு வயதுக்குட்பட்ட பிரிவில், மொத்தம் ஒன்பது குழந்தைகள் காணாமல் போனதாகவும், அவர்களில் மூன்று சிறுவர்கள் கண்டுபிடிக்கப்பட்டதாகவும், ஆறு குழந்தைகள் இன்னும் கண்டுபிடிக்கப்படவில்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இருப்பினும், காணாமல் போனவர்களில் பெரியவர்கள்தான் அதிக அளவில் உள்ளனர். ஜனவரி முதல் பாதியில், 363 பெண்கள் மற்றும் 253 ஆண்கள் என 616 பெரியவர்கள் காணாமல் போயுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. 90 ஆண்களையும் 91 பெண்களையும் போலீசார் கண்டுபிடித்தாலும், 435 பேர் இன்னும் கண்டுபிடிக்கப்படவில்லை என்று தரவுகள் தெரிவிக்கின்றன.
2025-ம் ஆண்டில், டெல்லியில் மொத்தம் 24,508 பேர் காணாமல் போயுள்ளதாகப் வழக்குகள் பதிவாகியுள்ளது. இதில் 60 சதவீதத்திற்கும் அதிகமான அளவில் பெண்கள் 14,870 ஆகும். ஆண்கள் 9,638 பேர் காணாமல் போய்யுள்ளனர். காவல்துறையினர் 15,421 நபர்களைக் கண்டுபிடித்தனர், ஆனால் 9,087 வழக்குகள் தீர்க்கப்படாமல் உள்ளன. ஒவ்வொரு ஆண்டும் காணாமல் போகும் நபர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. கடந்த பத்தாண்டுகளில், டெல்லியில் 2,32,737 பேர் காணாமல் போயுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. சுமார் 1.8 லட்சம் நபர்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளனர், ஆனால் சுமார் 52,000 வழக்குகள் தீர்க்கப்படாமல் உள்ளதாக டெல்லி காவல்துறை பதிவுகள் தெரிவிக்கின்றன.
