சென்னை: “அன்னம் தரும் அமுதக்கரங்கள்” வெற்றிகரமாக தொடர்ந்து 350வது நாளான இன்று சிறப்பு அழைப்பாளராக திராவிட முன்னேற்றக் கழக அமைப்புச் செயலாளர் ஆர். எஸ். பாரதி கலந்துகொண்டு துறைமுகம் பகுதியில் பொதுமக்களுக்கு காலை உணவு வழங்கி சிறப்பித்தார். முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு மக்கள் முதல்வரின் மனிதநேய விழாவாக சென்னை கிழக்கு மாவட்டம் ஆண்டுதோறும் கொண்டாடி வருகிறது.
இந்த ஆண்டு கழகத் தலைவரின் 72வது பிறந்த நாளையொட்டி, மாண்புமிகு இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் திரு.பி.கே.சேகர்பாபு அவர்களின் ஏற்பாட்டில் “அன்னம் தரும் அமுதக்கரங்கள்” மாபெரும் உன்னதமான திட்டமானது 2025 பிப்ரவரி 20ஆம் தேதி முதல், 2026 பிப்ரவரி 19ஆம் தேதி வரை 365 நாட்களும், நாள் ஒன்றுக்கு 1200 நபர்களுக்கு மேல், வெவ்வேறு இடங்களில் காலை உணவு வழங்க திட்டமிடப்பட்டுள்ளது. இச்சிறப்புமிகு திட்டத்தை செயல்படுத்தும் வகையில் 20.2.2025 அன்று கொளத்தூரில் மதிப்புமிகு அண்ணியார் திருமதி.துர்கா ஸ்டாலின் அவர்களுடைய திருக்கரங்களால் தொடங்கி வைத்து சிறப்பித்தார்கள்.
அந்த வகையில் 24ஆம் நாள் அமைச்சர் அர.சக்கரபாணி அவர்களும், 30வது நாள் அமைச்சர் கோவி. செழியன் அவர்களும், 50வது நாள் அமைச்சர் ஆர்.காந்தி அவர்களும், 75வது நாள் அமைச்சர் மா.சுப்பிரமணியம் அவர்களும், 100வது நாள் அமைச்சர் எ.வ.வேலு அவர்களும், 125வது நாள் அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர்.இராமச்சந்திரன் அவர்களும், 150வது நாள் அமைச்சர் ஆர்.ராஜேந்திரன் அவர்களும், 175வது நாள் அமைச்சர் அனிதா ஆர்.ராதாகிருஷ்ணன் அவர்களும், 200வது நாள் அமைச்சர் ஆர்.எஸ்.ராஜகண்ணப்பன் அவர்களும், 225வது நாள் அமைச்சர் எஸ்.ரகுபதி அவர்களும், 250வது நாள் அமைச்சர் சிவ.வீ.மெய்யநாதன் அவர்களும், 275வது நாள் அமைச்சர் கே.என்.நேரு அவர்களும், 300வது நாள் அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா அவர்களும், 325வது நாள் அமைச்சர் பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜன் அவர்களும் கலந்து கொண்டு காலை உணவு வழங்கி சிறப்பித்தார்கள்.
இந்நிகழ்ச்சியானது வெற்றிகரமாக தொடர்ந்து 350வது நாளான இன்று (04.02.2026), துறைமுகம் சட்டமன்றத் தொகுதி, 56அ-வது வார்டு, பிராட்வே, திருவள்ளூவர் நகர், பிரகாசம் சாலை மற்றும் 59அ-வது வார்டு, அண்ணா சாலை, எல்லீஸ் ரோடு ஆகிய 2 இடங்களில் நடைபெற்ற நிகழ்ச்சியில் சிறப்பு அழைப்பாளராக “திராவிட முன்னேற்றக் கழக அமைப்புச் செயலாளர் ஆர். எஸ். பாரதி கலந்து கொண்டு பொதுமக்களுக்கு காலை உணவு வழங்கி சிறப்பித்தார்.
இச்சிறப்புமிக்க “அன்னம் தரும் அமுதக்கரங்கள்” திட்டத்தில் அமைச்சர் பி.கே.சேகர்பாபு தினந்தோறும் 325 நாட்களுக்கும் மேல் 650-க்கும் மேற்பட்ட இடங்களில் காலை 7.00 மணியளவில் கலந்து கொண்டு பசியாக வரும் பொது மக்களுக்கு, பசியாற காலை உணவு வழங்கிக் கொண்டிருக்கிறார். இச்சிறப்புமிக்க திட்டமானது பொதுமக்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பை பெற்று, அப்பகுதி மக்கள் அனைவரும் மகிழ்ச்சியோடு காலை உணவு அருந்திவிட்டு, முதலமைச்சர் அவர்களை வாழ்த்தி வருகிறார்கள்.
இந்நிகழ்ச்சியில் அம்பத்தூர் சட்டமன்ற உறுப்பினர் ஜோசப் சாமுவேல், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் கே.எஸ்.ரவிச்சந்திரன், பகுதி செயலாளர்கள் எஸ்.ராஜசேகர் எஸ்.முரளி, துறைமுகம் தொகுதி தேர்தல் பார்வையாளர் இரா.நரேந்திரன், தலைமை செயற்குழு உறுப்பினர் விஜயகுமார், மண்டலக் குழுத்தலைவர்கள் பி.ஸ்ரீராமுலு, சரிதா மகேஷ்குமார், மாவட்ட துணைச் செயலாளர் தேவன், மாமன்ற உறுப்பினர் பரிமளம், வட்ட செயலாளர்கள் பரத்குமார், சேப்பாக்கம் பிரபாகரன் மற்றும் கழக நிர்வாகிகள் ஆகியோர் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.
