டெல்லி: 2026-27ம் நிதியாண்டுக்கான ஒன்றிய பட்ஜெட்டை நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்தார். இது அவர் தாக்கல் செய்யும் 9வது பட்ஜெட் ஆகும். நாடாளுமன்றத்தின் பட்ஜெட் கூட்டத்தொடர் கடந்த மாதம் 28ம் தேதி தொடங்கியது. சுதந்திர இந்தியாவில் முதல்முறையாக ஞாயிற்றுக்கிழமையன்று பட்ஜெட் தாக்கல் செய்யப்படுகிறது.
பட்ஜெட் உரையில்:
- தனி நபர் வருமான வரி விகிதத்தில் எந்த மாற்றமும் இல்லை
- இந்தியாவில் உள்ள டேட்டா மையங்களுக்கு 2047ஆம் ஆண்டு வரை வரி கிடையாது.
- பங்குகளை திருப்பி வாங்கும் நிறுவனங்களுக்கு மூலதன ஆதாய வரி விதிக்கப்படும்.
- வெளிநாடு வாழ் இந்தியர்கள் சொத்துக்களை விற்கும்போது செலுத்த வேண்டிய வருமான வரி குறைப்பு.
- உள்நாட்டில் பயிற்சி விமானங்களை உற்பத்தி செய்ய பயன்படுத்தும் மூலப் பொருட்களுக்கு சுங்க வரி நீக்கம்
- கடல்சார்ந்த ஏற்றுமதி பொருட்களை உற்பத்தி செய்ய இறக்குமதி செய்யப்படும் மூலப்பொருட்களுக்கு வரிச்சலுகை உயர்வு
- சோலார் பேனல் கண்ணாடிகளை உற்பத்தி செய்யும் பயன்படும் சோடியத்திற்கு முழு வரி விலக்கு.
- காலணிகள் ஏற்றுமதி செய்வோருக்கு மூலப் பொருட்களை வரி இல்லாமல் இறக்குமதி செய்ய சலுகை.
- ஏற்றுமதி செய்யும் தொழில் நிறுவனங்கள் உள்நாட்டு சந்தையில் விற்பனை செய்ய அனுமதிக்கப்படும்
- புற்றுநோய் சிகிச்சைக்கு பயன்படுத்தும் 17 மருந்துகளுக்கு சுங்க வரி
நீக்கம் - அரிய வகை நோய்களுக்கான மருந்துகளின் இறக்குமதிக்குமான
வரிகளும் நீக்கம் - மின்சார வாகனங்களை ஊக்குவிக்கும் வகையில் லித்தியம் பேட்டரி தயாரிக்க பயன்படுத்தப்படும் பொருட்களுக்கு இறக்குமதி வரி இல்லை
- குறிப்பிட்ட சில மின்னணு சாதனங்களுக்கு ஆலையிலேயே சுங்கச் சோதனை நடத்தி ஏற்றுமதி அனுமதி வழங்கப்படும்
- ஆழ்கடல், பிரத்யேக பொருளாதார மண்டலத்தில் பிடிக்கப்படும் மீன்களுக்கு முழு வரி விலக்கு
