×

சாலை விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்துக்கு வழங்கப்படும் இழப்பீட்டுத் தொகைக்கு வருமான வரி கிடையாது: ஒன்றிய பட்ஜெட்டில் அறிவிப்பு

டெல்லி: 2026-27ம் நிதியாண்டுக்கான ஒன்றிய பட்ஜெட்டை நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்தார். இது அவர் தாக்கல் செய்யும் 9வது பட்ஜெட் ஆகும். நாடாளுமன்றத்தின் பட்ஜெட் கூட்டத்தொடர் கடந்த மாதம் 28ம் தேதி தொடங்கியது. சுதந்திர இந்தியாவில் முதல்முறையாக ஞாயிற்றுக்கிழமையன்று பட்ஜெட் தாக்கல் செய்யப்படுகிறது.

பட்ஜெட் உரையில்:
12 ஆண்டுகால மோடி ஆட்சியில் நாட்டின் பொருளாதார நிலைத்தன்மையை உறுதிப்படுத்தி உள்ளோம். ஒன்றிய அரசின் சீர்திருத்த நடவடிக்கையால் 7 சதவீத பொருளாதார வளர்ச்சியை அடைந்துள்ளோம்.  புதிய தொழில்நுட்பத்தால் உற்பத்திதுறையில் பெரும் வளர்ச்சியை எட்டியுள்ளோம்.

இளைஞர் சக்தியால் உந்தப்பட்டது 2026-27 ஒன்றிய பட்ஜெட். ஏழை, விளிம்புநிலை மக்களின் வாழ்க்கையை மேம்படுத்துவது அரசின் பிரதான கொள்கை. பொருளாதாரத்தில் முன்னேறிய நாடாக இந்தியாவை உருவாக்க ஒத்துழைப்பு தந்த மக்களுக்கு எனது நன்றி.

350 சீர்திருத்தங்களை ஒன்றிய அரசு மேற்கொண்டுள்ளது.
வேலைவாய்ப்பு, உற்பத்தியை பெருக்கும் வகையிலும் சீர்திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளது. கட்டுப்பாடுகளை தளர்த்துவது தொடர்பாக மாநில அரசுகளுடன் இணைந்து ஒன்றிய அரசு செயல்படுகிறது.

  • நாட்டில் இளைஞர்களின் வேலைவாய்ப்பை உயர்த்துவதே அரசின் இலக்கு
  • எலக்ட்ரானிக்ஸ் ஏற்றுமதி ஊக்குவிப்பு திட்டத்தில் 40 ஆயிரம் கோடி ரூபாய் ஒதுக்கீடு
  • செமி கண்டக்டர் உற்பத்திக்கு 2.0 திட்டம் செயல்படுத்தப்படும்
  • ஒன்றிய அரசின் பட்ஜெட்டில் உயிரி மருத்துவத்துக்கு 10 ஆயிரம் கோடி ரூபாய் ஒதுக்கீடு
  • மாநிலங்களுடன் இணைந்து 3 பிரத்யேக கெமிக்கல் பூங்காக்கள் உருவாக்கப்படும்
  • சமுதாயத்தின் அனைத்து பிரிவினரும் நாட்டின் வளங்களை பெறுவது அரசின் லட்சியங்களில் ஒன்று
  • கன்டெய்னர்களை உற்பத்தி செய்து உலகளவில் போட்டியிட பிரத்யேகத் திட்டம்
  • அரிய வகை கனிமங்களை உற்பத்தி செய்ய வழித்தடத் திட்டம்.
  • பாரம்பரிய தொழில்களை ஊக்குவிக்க 200 பிரத்யேக பூங்காங்கள் அமைக்கப்படும்.
  • விளையாட்டு சாதனங்களை உற்பத்தி செய்ய பிரத்யேகத் திட்டம்.
  • புதிய மெகா ஜவுளி பூங்காக்கள் அமைக்கப்படும்.
  • சிறு, குறு தொழில் நிறுவனங்களை ஊக்குவிக்க ரூ.10,000 கோடி
    ஒதுக்கீடு
  • மூலதனச் செலவு பாஜக ஆட்சியில் 12.2 லட்சம் கோடியாக அதிகரிப்பு
  • சரக்கு போக்குவரத்துக்கு பிரத்யேக ரயில் பாதை அமைக்கப்படும்.
  • இந்தியாவின் கிழக்கு மற்றும் மேற்கு பகுதிகளை இணைக்கும் வகையில் பிரத்யேக ரயில் பாதை
  • சென்னை-ஐதராபாத், பெங்களூரு-சென்னை உள்ளிட்ட 7 அதிவேக ரயில் வழித்தடங்கள் உருவாக்கப்படும்
  • உள்நாட்டு நீர்வழிப் போக்குவரத்தை 6%லிருந்து 12 சதவீதமாக 2047க்குள் உயர்த்தத் திட்டம்
  • அடுத்த 5 ஆண்டுகளில் 20 புதிய நீர்வழித்தடங்கள் அமைக்கப்படும்.
  • நகராட்சி பத்திரம் வெளியிட்டு நிதியை திரட்ட ரூ.100 கோடியில்
    ஒன்றிய அரசு திட்டம்
  • வங்கித் துறையை சீர்திருத்தி அடுத்தக்கட்ட வளர்ச்சிக்கு வழிவகுக்க உயர்மட்டக் குழு அமைக்கப்படும்.
  • மோடி தலைமையிலான அரசில்  25 கோடி ஏழைகள் வறுமையில் இருந்து மீட்கப்பட்டுள்ளனர்
  • அடுத்த 5 ஆண்டுகளில் ரேடியாலஜி, அனஸ்தீசியா உள்ளடக்கிய 1 லட்சம் மருத்துவ பணியாளர்களை உருவாக்கத் திட்டம்
  • நாடு முழுவதும் மருத்துவத் சுற்றுலாவை மேம்படுத்துவதற்கு 5 இடங்களில் மையங்கள் உருவாக்கப்படும்
  • எய்ம்ஸ் போல 3 புதிய அகில இந்திய ஆயுர்வேத உயர் கல்வி நிறுவனங்கள் உருவாக்கப்படும்.
  • மருத்துவத் துறையில் இளைஞர்கள் திறனை மேம்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும்.
  • சேவை துறைகள் மூலம் பொருளாதார வளர்ச்சியை ஊக்குவிக்க திட்டம்.
  • வடிமைப்புக்கு புதிய தேசிய கல்வி நிறுவனம் அமைக்கப்படும்.
  • கல்வியை ஊக்குவிக்க பல்கலைக்கழக நகரங்கள் உருவாக்கப்படும்.
  • ஒவ்வொரு மாவட்டத்திலும் ஒவ்வொரு பெண்கள் விடுதி அமைக்கப்படும்.
  • கால்நடை கல்வி நிறுவனங்களுக்கு முதலீட்டு மானியம் வழங்கப்படும்
  • ஐஐஎம் உதவியுடன் 20 சுற்றுலா தளங்களில் வழிகாட்டிகளை உருவாக்க பயிற்சியளிக்கப்படும்
  • 2026-27ஆம் நிதியாண்டில் ரூ.17.2 லட்சம் கோடி கடன் வாங்க ஒன்றிய அரசு முடிவு
  • தமிழ்நாட்டின் பொதிகை மலை மற்றும் அரக்கு பள்ளத்தாக்கு, இமாச்சல், உத்தராகண்ட், ஜம்முவில் மலையேற்றத்தை ஊக்குவிக்க திட்டம்.
  • ஆதிச்சநல்லூர், தோளவீரா, ஹஸ்தினாபூர் உள்ளிட்ட 15 இடங்களில் தொல்லியல் தலங்கள் கலாச்சார மையங்களாக மேம்படுத்தப்படும்
  • 2026ல் உலக புலிகள் மாநாட்டை இந்தியா நடத்துகிறது
  • கடலோர பகுதிகளில் தேங்காய் சாகுபடியை ஊக்குவிக்க புதிய திட்டம் செயல்படுத்தப்படும்.
  • தென்னை உற்பத்தி செய்யும் மாநிலங்களில் பட்டுப்போன தென்னை மரங்களை நீக்கி புது மரங்கள் நடத் திட்டம்
  • இந்தியாவில் முந்திரி, கோகோ உற்பத்தியை ஊக்குவிக்க பிரத்யேக
    திட்டம்
  • பால் உற்பத்தியை அதிகரிக்கவும், கோழி வளர்ப்பை ஊக்குவிக்கவும் நடவடிக்கை
  • 15,000 இந்திய பள்ளிக் கூடங்களில் Content Creator Labs உருவாக்கப்படும்
  • பெண்களை தொழில்முனைவோராக்க SheMart திட்டம்.
  • கிராமப்புறங்களில் மகளிர் சுய உதவிக் குழுக்கள் பெண் நடத்தும் sheMart கடைகள் உருவாக்கப்படும்
  • பழவேற்காடு ஏரியில் பறவைகளை காண்பதற்கான பிரத்யேக காட்சி மையம் அமைக்கப்படும்.
  • 16-வது நிதி ஆணையத்தின் பரிந்துரைப்படி மாநிலங்களுக்கு ரூ.1.40 லட்சம் கோடி விடுவிப்பு
  • சந்தன உற்பத்தியை ஊக்குவிக்க மாநிலங்களுடன் இணைந்து பிரத்யேக திட்டம் உருவாக்கப்படும்

    வருமானவரி

  • சாலை விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்துக்கு வழங்கப்படும் இழப்பீட்டுத் தொகைக்கு வருமான வரி கிடையாது
  • வருமான வரி கணக்கு தாக்கல் நடைமுறை எளிமையாக்கப்படும்
  • திருத்தப்பட்ட வருமான வரி கணக்கை தாக்கல் செய்ய டிசம்பரில் இருந்து மார்ச் வரை கால நீட்டிப்பு
  • நிதிப்பற்றாக்குறை மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 4.4 சதவீதம் என நிதிக்குழு மதிப்பீடு.
  • தனி நபர்கள் வழக்கம்போல் ஜூலை 31 வரை வருமான வரி தாக்கல் செய்யலாம்.
  • புதிய வருமான வரிச்சட்டம் ஏப்ரல் 1ம் தேதி அமலுக்கு வரும்.
  • வரி சார்ந்த குற்றங்களுக்கான அதிகபட்ச தண்டனை 2 ஆண்டுகளாகக் குறைப்பு.
  • வரி சார்ந்த சிறு குற்றங்களுக்கு அபராதம் மட்டுமே விதிக்கப்படும்.
  • வருமான வரி குறித்த தவறான தகவல்களுக்கு 100 சதவீதம் அபராதம் விதிக்கப்படும்.
  • வெளிநாடுகளில் சொத்து வைத்திருப்பதை தெரிவிக்க வாய்ப்பு வழங்கும் புதிய திட்டம்.
  • இந்தியாவில் Cloud சேவைகளை வழங்கும் வெளிநாட்டு நிறுவனங்களுக்கு 2047 வரை வரிவிலக்கு
  • பங்குகளை திருப்பி வாங்கும் நிறுவனங்களுக்கு மூலதன ஆதாய வரி விதிக்கப்படும்
Tags : Delhi ,Finance Minister ,Nirmala Sitharaman ,India ,
× RELATED முதல்முறையாக ஆஸி. ஓபனை வென்றார் அல்காரஸ்: ஜோகோவிச் போராடி தோல்வி